உயிர்த்தெழுதலின் கதைமாதிரி

The Story of Easter

7 ல் 3 நாள்

புதன்கிழமை

இயேசுவுக்கு ஒரு கடைசி வேண்டுகோள் இருந்தது. அடுத்த நாள் எதிர்கொள்ளப் போவதை அவர் அறிந்திருந்தார், ஆனால் அவருடைய கடைசி ஜெபம் தனக்காக அல்ல, உங்களுக்காக. நம் அனைவருக்காக. இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்காக ஜெபம் செய்தார். இயேசுவின் ஜெபம் கர்த்தரின் சித்தத்தைக் குறித்த தெளிவான கண்ணோட்டத்தை காண்பிக்கிறது. இந்த வாரம், இயேசுவின் பிரார்த்தனைக்கு நீங்களே பதிலாக இருங்கள். எப்படியெனில், அவருடைய ஜெபத்தின் ஒவ்வொரு வரியையும் தியானியுங்கள். இவ்வாரயிறுதியில் உலகெங்குமுள்ள சபைகள் அவருடைய உயிர்த்தெழுதலைக் கொண்டாட கூடிவரும் வேளையிலே, நாம் கர்த்தரோடும், ஒவ்வொருவரோடும் இன்னும் நெருங்கி வருவதற்கான வழிகளைத் தேடுவோம். இயேசுவின் ஜெபத்தை உங்கள் ஜெபமாக்கிக் கொள்ளுங்கள். நம் ஒற்றுமையின் மூலமாகவும், ஆண்டவரின் அன்பின் மூலமாகவும், இவ்வுலகம் இயேசுவின் மகிமையை காணட்டும்.

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

The Story of Easter

உங்கள் வாழ்க்கையின் கடைசி வாரம் அதுதான் என்று தெரிந்தால் அதை நீங்கள் எவ்வாறு செலவிடுவீர்கள்? இயேசு பூமியில் மனித வடிவத்தில் இருந்த கடைசி வாரம் மறக்கமுடியாத தருணங்கள். நிறைவான தீர்க்கதரிசனங்கள், கூடி நெருங்கிய ஜெபம், ஆழமான விவாதம், அடையாளச் செயல்கள், மற்றும் உலகையே புரட்டிப்போடும் நிகழ்வுகளால் நிறைந்திருந்தது. உயிர்த்தெழுதலுக்கு முந்தைய திங்கட்கிழமை தொடங்கும் வண்ணமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Life.Churchன் வேத திட்டம் இப்புனித வாரத்தில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு ஊடாக உங்களை அழைத்து செல்லும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். Life.Church பற்றி மேலும் விபரங்களை அறிய www.life.churchஐ தயவு செய்து பார்வையிடுங்கள்