இயேசுவினுடைய உவமைகள்மாதிரி

The Parables of Jesus

36 ல் 34 நாள்

கொடிய தோட்டவேலையாட்கள்

மற்றவை போலவே, இந்த உவமையும் நம்முடைய பதில் செயல்களைப் பற்றியதுதான். நம் வாழ்க்கையை குறித்த கர்த்தரின் கூற்றுக்கு பதிலளிப்போமா? அல்லது, நம் எண்ணம் மற்றும் ஏற்பாட்டுக்காக அவருடைய பணியாளரை நிராகரிக்கிறோமா? நாம் அவருக்காக பணிசெய்யும் ஆசீர்வாதத்தை பெற்றதற்காக கர்த்தருக்கென்று "கனி தரும்" உற்பத்தி நிறைந்த வாழ்க்கை வாழ்வோமா? இந்த உவமை நமக்கு கர்த்தரோடு உடன்படிக்கையால் இணைந்த வாழ்க்கையின் மேன்மையை உணர்த்துகிறது, அந்த மேன்மை, சில பொறுப்புகளையும் எப்போதும் கொண்டுவருகிறது.

நாம் கர்த்தரின் தூதுவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதை கேட்பதும் முக்கியம். தேவன் நம்மோடு தேவதூதர்களால், சொப்பனங்களால், தரிசனங்களால் பேச முடியும் என்றாலும், சரித்திரம் முழுவதிலும் அதிகமாக மனிதர்கள் மூலமே தொடர்பு கொண்டுள்ளார். கர்த்தரின் மக்களோ தீர்க்கர்களை விட தங்கள் அறிவையும் ஆசைகளையுமே சார்ந்து கொண்டனர், நாமும் இதைப்போலவே கர்த்தரின் சத்தியத்தைப் பேசும் மக்களை நிராகரிக்க நினைப்போம். நண்பர்கள், குடும்பம், சபையார் மற்றும் ஆலய மூப்பர்கள் எல்லாரும் நாம் செய்வதைப் போற்றவும், சரியென்று சொல்லவும் அழைக்கப்படவில்லை. அப்படியல்ல, உண்மையாய் இயேசுவையும், நம்மையும் நேசிப்போர் நம்மை மறித்து சரிப்படுத்தி கிறிஸ்துவைப்போல நாம் மாற வழிவகுப்பார்கள்.

இப்படியிருக்க, நீங்கள் ஆண்டவர் உங்களை பரிசுத்த ஆவியின் மூலமோ, அவருடைய வார்த்தையாலோ, ஊக்கப்படுத்தினாலோ அல்லது சரிப்படுத்தினாலோ எவ்வாறு பதிலளிப்பீர்கள்? அவர்களுடைய வார்த்தையை நீங்கள் தாழ்மையோடு வரவேற்கிறீர்களா? அல்லது கல்லைப்போல பிடிவாதமாக வளைந்துகொடுக்காமல், உங்கள் வழிகளை அமைத்துக்கொள்வீர்களா?
நாள் 33நாள் 35

இந்த திட்டத்தைப் பற்றி

The Parables of Jesus

இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்!

More

We would like to thank Trinity New Life Church for this plan. For more information, please visit: http://www.trinitynewlife.com/