இயேசுவினுடைய உவமைகள்மாதிரி
திறமைகள் - தாலந்துகள்
எவ்வளவு பெற்றீர்கள் என்பதல்ல கேள்வி, நீங்கள் பெற்றுள்ளதை வைத்து என்ன செய்துள்ளீர்கள் என்பதே! இந்த உவமையில், ஊழியர்கள் எவ்வளவு தாலந்துகளை துவக்கத்தில் பெற்றனர் என்பது அவர்கள் பொறுப்பில் இல்லை; அவற்றைக் கொண்டு அவர்கள் என்ன செய்தனர் என்பதை மட்டுமே அவர்கள் பொறுப்பேற்க வேண்டியதாக இருந்தது.
உங்களுக்கு கடவுள் என்னன்ன திறமைகள், ஆசீர்வாதங்கள், பேரார்வங்கள், திறந்த வாசல்கள், மற்றும் பலவற்றை அளித்துள்ளார்? அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள்? இன்னும் நிறைய திறந்த வாசல்களை, செல்வத்தை, மக்களை, தேவைகளை எதிர்பார்த்து அவற்றை பயன்படுத்தாது காத்துக்கொண்டிருக்கிறீர்களா? அல்லது எதாவது தவறாக மாறினால் என்ன ஆகும், முழுமையற்ற செயலாக நின்றுவிடுமோ என்ற பயத்தில் உரைந்துள்ளீர்களா?
தேவனோ சிறந்த தகப்பன்; அவர் பிள்ளைகள் விசுவாசத்தோடு களமிறங்கி, கொடுக்கப்பட்ட தாலந்துகளையும் ஆசீர்வாதங்களையும் அவருடைய இராஜ்யத்தின் வருகைக்கென பயன்படுத்தும் தருணங்களில் சிறிதும் கோபிப்பதில்லை. ஆனால், நாம் பயந்தோ அல்லது மேலும் வேண்டும் என்ற ஆசையோடோ ஒன்றும் செய்யாமல் காத்துக்கொண்டிருந்தால் அவருடைய கண்டிப்பிற்கு ஆளாவது உறுதி! ஆண்டவர் உங்களுக்கு அளித்துள்ள தாலந்துகளை வீணாய் போக இன்று விட்டுவிடாதீர்கள்--துணிந்து முன்வந்து அவற்றை கடவுளின் இராஜ்யத்திற்கென பயன்படுத்துங்கள்!
எவ்வளவு பெற்றீர்கள் என்பதல்ல கேள்வி, நீங்கள் பெற்றுள்ளதை வைத்து என்ன செய்துள்ளீர்கள் என்பதே! இந்த உவமையில், ஊழியர்கள் எவ்வளவு தாலந்துகளை துவக்கத்தில் பெற்றனர் என்பது அவர்கள் பொறுப்பில் இல்லை; அவற்றைக் கொண்டு அவர்கள் என்ன செய்தனர் என்பதை மட்டுமே அவர்கள் பொறுப்பேற்க வேண்டியதாக இருந்தது.
உங்களுக்கு கடவுள் என்னன்ன திறமைகள், ஆசீர்வாதங்கள், பேரார்வங்கள், திறந்த வாசல்கள், மற்றும் பலவற்றை அளித்துள்ளார்? அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள்? இன்னும் நிறைய திறந்த வாசல்களை, செல்வத்தை, மக்களை, தேவைகளை எதிர்பார்த்து அவற்றை பயன்படுத்தாது காத்துக்கொண்டிருக்கிறீர்களா? அல்லது எதாவது தவறாக மாறினால் என்ன ஆகும், முழுமையற்ற செயலாக நின்றுவிடுமோ என்ற பயத்தில் உரைந்துள்ளீர்களா?
தேவனோ சிறந்த தகப்பன்; அவர் பிள்ளைகள் விசுவாசத்தோடு களமிறங்கி, கொடுக்கப்பட்ட தாலந்துகளையும் ஆசீர்வாதங்களையும் அவருடைய இராஜ்யத்தின் வருகைக்கென பயன்படுத்தும் தருணங்களில் சிறிதும் கோபிப்பதில்லை. ஆனால், நாம் பயந்தோ அல்லது மேலும் வேண்டும் என்ற ஆசையோடோ ஒன்றும் செய்யாமல் காத்துக்கொண்டிருந்தால் அவருடைய கண்டிப்பிற்கு ஆளாவது உறுதி! ஆண்டவர் உங்களுக்கு அளித்துள்ள தாலந்துகளை வீணாய் போக இன்று விட்டுவிடாதீர்கள்--துணிந்து முன்வந்து அவற்றை கடவுளின் இராஜ்யத்திற்கென பயன்படுத்துங்கள்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்!
More
We would like to thank Trinity New Life Church for this plan. For more information, please visit: http://www.trinitynewlife.com/