இயேசுவினுடைய உவமைகள்மாதிரி
ஐசுவரியவானும் லாசருவும்
இந்த உவமையில் நாம் இயேசுவிடமிருந்து இரண்டு படிப்பினைகளைப் பெறுகிறோம்: ஒன்று நம்முடைய செல்வத்தைப் பயன்படுத்துவது பற்றியும், இரண்டாவது வேதவசனங்களை நம்புவது குறித்தும்.
இந்த உவமையின் முதல் பகுதியில் (வசனங்கள் 19-26) இரண்டு மனிதர்கள் வாழ்க்கையிலிருந்து நித்தியத்திற்கு நகரும்போது அவர்களின் தலைவிதி தலைகீழாக இருப்பதைக் காண்கிறோம். ஒரு மேசையின் துணிக்கைக்காக ஏங்கின லாசரு, ஆபிரகாமுடன் இருக்க தேவதூதர்களால் சுமக்கப்படுகிறார். முன்பு பிச்சைக்காரனான லாசருவை சகித்துக்கொள்ளமுடியாத பணக்காரன், இப்போது நித்திய வேதனையைத் காண்கிறான். இந்த உவமை மறுமையில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை நமக்குக் கற்பிப்பதற்காக அல்ல, நம் செல்வத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதன் முக்கியத்துவத்தை காட்டுவதற்கே, எவ்வளவு தொகையைப் பயன்படுத்தினாலும் அதை நம்முடைய சுற்றத்தாரை நேசிக்கவும் கவனிக்கவும் பயன்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுவதற்காக. செல்வம், ஏராளமான செல்வம் கூட மோசமானதல்ல. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில். இது அவருடைய இராஜ்ஜிய கவனிப்புக்காகவா, அல்லது சரீர இன்பத்திற்காகவா?
ஐசுவரியவான் தன் தவறை உணர்ந்தவுடன், அவனுடைய ஆசை தன் சகோதரர்களை எச்சரிக்க வேண்டும் என்பதே, அதனால் அவர்கள் வேதனையைத் தவிர்க்கலாம், ஆனால் ஆபிரகாம் அவருக்கு வேதவசனங்களில் ஏற்கனவே ஒரு எச்சரிக்கை இருப்பதை நினைவுபடுத்துகிறார். ஒரு அற்புதமான அடையாளம் அவர்களின் மனதை மாற்றிவிடும் என்று அவன் நம்புகிறான், ஆனால் ஆபிரகாம் அதை ஏற்கவில்லை. தேவனின் வார்த்தைகளை நமக்கு முன்னால் கவனிக்காமல் ஒரு அடையாளத்தைத் தேடுகிற ஐசுவரியவானின்வேதம் அதே வலையை நாம் தவிர்க்க வேண்டும். இயேசு தம்முடைய அநேக அடையாளம் காட்டினார், ஆனால் அனைவரும் அவரை நம்பவில்லை, பின்பற்றவில்லை. படைத்தவரிடம் எப்போதும் கோரிக்கையை மட்டும் வைக்காமல், வேதவசனங்களில் நமக்கு இருக்கும் எச்சரிக்கைகளுக்கு(அளவுக்கு அதிகமாகவே) நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இந்த உவமையில் நாம் இயேசுவிடமிருந்து இரண்டு படிப்பினைகளைப் பெறுகிறோம்: ஒன்று நம்முடைய செல்வத்தைப் பயன்படுத்துவது பற்றியும், இரண்டாவது வேதவசனங்களை நம்புவது குறித்தும்.
இந்த உவமையின் முதல் பகுதியில் (வசனங்கள் 19-26) இரண்டு மனிதர்கள் வாழ்க்கையிலிருந்து நித்தியத்திற்கு நகரும்போது அவர்களின் தலைவிதி தலைகீழாக இருப்பதைக் காண்கிறோம். ஒரு மேசையின் துணிக்கைக்காக ஏங்கின லாசரு, ஆபிரகாமுடன் இருக்க தேவதூதர்களால் சுமக்கப்படுகிறார். முன்பு பிச்சைக்காரனான லாசருவை சகித்துக்கொள்ளமுடியாத பணக்காரன், இப்போது நித்திய வேதனையைத் காண்கிறான். இந்த உவமை மறுமையில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை நமக்குக் கற்பிப்பதற்காக அல்ல, நம் செல்வத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதன் முக்கியத்துவத்தை காட்டுவதற்கே, எவ்வளவு தொகையைப் பயன்படுத்தினாலும் அதை நம்முடைய சுற்றத்தாரை நேசிக்கவும் கவனிக்கவும் பயன்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுவதற்காக. செல்வம், ஏராளமான செல்வம் கூட மோசமானதல்ல. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில். இது அவருடைய இராஜ்ஜிய கவனிப்புக்காகவா, அல்லது சரீர இன்பத்திற்காகவா?
ஐசுவரியவான் தன் தவறை உணர்ந்தவுடன், அவனுடைய ஆசை தன் சகோதரர்களை எச்சரிக்க வேண்டும் என்பதே, அதனால் அவர்கள் வேதனையைத் தவிர்க்கலாம், ஆனால் ஆபிரகாம் அவருக்கு வேதவசனங்களில் ஏற்கனவே ஒரு எச்சரிக்கை இருப்பதை நினைவுபடுத்துகிறார். ஒரு அற்புதமான அடையாளம் அவர்களின் மனதை மாற்றிவிடும் என்று அவன் நம்புகிறான், ஆனால் ஆபிரகாம் அதை ஏற்கவில்லை. தேவனின் வார்த்தைகளை நமக்கு முன்னால் கவனிக்காமல் ஒரு அடையாளத்தைத் தேடுகிற ஐசுவரியவானின்வேதம் அதே வலையை நாம் தவிர்க்க வேண்டும். இயேசு தம்முடைய அநேக அடையாளம் காட்டினார், ஆனால் அனைவரும் அவரை நம்பவில்லை, பின்பற்றவில்லை. படைத்தவரிடம் எப்போதும் கோரிக்கையை மட்டும் வைக்காமல், வேதவசனங்களில் நமக்கு இருக்கும் எச்சரிக்கைகளுக்கு(அளவுக்கு அதிகமாகவே) நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்!
More
We would like to thank Trinity New Life Church for this plan. For more information, please visit: http://www.trinitynewlife.com/