கிறிஸ்துமஸ்: கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேறியதுமாதிரி

சாஸ்திரிகள் குழந்தை இயேசுவுக்கு மூன்று பரிசுகளைக் கொடுத்தனர்: பொன், தூபவர்க்கம் மற்றும் வெள்ளைப்போளம்.
தங்கம் ஒரு அரசனுக்கு கொடுக்கும் பரிசு. இது இயேசுவை நம் ஆண்டவராக ஒப்புக்கொள்ள அழைக்கிறது.
கடவுளுக்கு காணிக்கையாக கோவிலில் எரிக்கப்படும் தூபத்தின் முக்கிய பொருட்களில் ஒன்று சாம்பிராணி (யாத்திராகமம் 30:34-38). தூபவர்க்கத்தை பரிசாக அளித்ததன் மூலம், இயேசு ஆராதனைக்குரியவர் என்பதை சாஸ்திரிகள் தெளிவுபடுத்தினர்.
வெள்ளைபோளம் பதப்படுத்த பயன்படுத்தப்பட்டது. இயேசுவின் உடலை அடக்கம் செய்வதற்காக நிக்கொதேமு வெள்ளைப்போளத்தையும் கரியபோளமும் கொண்டுவந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம் (யோவான் 19:39). இயேசுவுக்கு வெள்ளைபோளம் கொடுப்பதின் மூலம், இயேசுவின் மரணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை சாஸ்திரிகள் முன்னறிவித்தனர்.
இதோ கேள்வி: நீங்களும் இந்த மூன்று பரிசுகளையும் இயேசுவுக்குக் கொடுப்பீர்களா? இயேசுவை ராஜாவாகக் கௌரவிப்பீர்களா? அவரை வணங்குவீர்களா? இயேசுவின் சிலுவை மரணத்தை உங்களின் பாவங்களுக்கான கூலியாக ஏற்றுக் கொள்வீர்களா?
பிரார்த்தனை
அன்புள்ள இயேசுவே,
உம்மை என் அரசராக ஒப்புக்கொள்ள நான் முடிவு செய்கிறேன்.
உம்மை வணங்க நான் முடிவு செய்கிறேன்.
எனது பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காக சிலுவையில் உமது மரணத்தை மிகுந்த நன்றியுடன் ஏற்றுக் கொள்ள முடிவு செய்கிறேன்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

மனிதகுலத்தால் கண்டுபிடிக்கப்பட்ட பொய்யான கடவுள்கள், கடவுள்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் அறிந்த வகையில் கடவுளுக்கு ஒரு வரையறை கொடுக்க, ஆச்சரியப்படத்தக்க வகையில், அந்த கடவுள்கள் மனிதர்களைப் போலவே இருந்தனர். நம்மை கவனிக்க அவர்களுக்கு நமது பக்தியை லஞ்சமாக கொடுத்து அவர்களை ஈர்க்க வேண்டியிருந்தது. ஆனால் ஒரே மெய்யான தேவன், நம்மைத் தம்மிடமாய் மீட்டெடுக்க அவரே நம்மை முதலில் தேடுகிறார் - அதுதான் கிறிஸ்துமஸ் கதை.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவர் சர்வவல்லவர்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு
