இயேசுவினுடைய உவமைகள்மாதிரி
தொலைந்து போன ஆடும் நாணயமும்
"பாவிகள், வரி வசூலிப்பவர்கள்" மேல் இயேசு எவ்வளவு கரிசனம்கொண்டார் என்று புகார் செய்த பரிசேயர்களையும் வேதபாரகர்களையும் குறிவைத்து இந்த இரண்டு உவமைகளும் உள்ளன.
வழியிழந்தவர்களுக்கான இயேசுவின் அன்பு அன்றைய மதத் தலைவர்களின் தீர்ப்பிலிருந்து தீவிரமாக விலகியது. பரிசேயர்களின் நியாயத்தீர்ப்பு மனப்பான்மையை அல்ல, தனது அணுகுமுறையையே மோட்சம் பிரதிபலிக்கிறது என்பதையும், ஒரேயொரு பாவி மனந்திரும்பும்போது சொர்க்கம் எவ்வாறு மகிழ்ச்சியடைகிறது என்பதையும் இயேசு இங்கு பகிர்ந்துகொள்கிறார்.
நாம் எவ்வளவு நீண்ட காலமாக கடவுளைப் பின்பற்றுகிறோமோ, பரிசேயர்களைப் போன்ற ஒரு சுயநீதி மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அவ்வளவு எளிதாகிவிடும், எனவே ஒரு பாவி ஆகிலும் மனந்திரும்புவதைக் காணும்போது நாம் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள "இழந்த ஆடுகள்" மற்றும் "இழந்த நாணயங்கள்" ஆகியவற்றைத் தேடிச்செல்ல நாம் என்ன செய்கிறோம் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். "அந்த மக்களுக்காக" நம் இதயத்தில் ஒரு இடம் இருப்பது முக்கியம், கிறிஸ்துவுக்கான வழியைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவ நம்மால் முடிந்த அனைத்தையும் செய்து, அவர்கள் அவரிடம் திரும்பும்போது அவர்களுடன் கெம்பீரமாக சந்தோஷப்படுவோம்.
"பாவிகள், வரி வசூலிப்பவர்கள்" மேல் இயேசு எவ்வளவு கரிசனம்கொண்டார் என்று புகார் செய்த பரிசேயர்களையும் வேதபாரகர்களையும் குறிவைத்து இந்த இரண்டு உவமைகளும் உள்ளன.
வழியிழந்தவர்களுக்கான இயேசுவின் அன்பு அன்றைய மதத் தலைவர்களின் தீர்ப்பிலிருந்து தீவிரமாக விலகியது. பரிசேயர்களின் நியாயத்தீர்ப்பு மனப்பான்மையை அல்ல, தனது அணுகுமுறையையே மோட்சம் பிரதிபலிக்கிறது என்பதையும், ஒரேயொரு பாவி மனந்திரும்பும்போது சொர்க்கம் எவ்வாறு மகிழ்ச்சியடைகிறது என்பதையும் இயேசு இங்கு பகிர்ந்துகொள்கிறார்.
நாம் எவ்வளவு நீண்ட காலமாக கடவுளைப் பின்பற்றுகிறோமோ, பரிசேயர்களைப் போன்ற ஒரு சுயநீதி மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அவ்வளவு எளிதாகிவிடும், எனவே ஒரு பாவி ஆகிலும் மனந்திரும்புவதைக் காணும்போது நாம் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள "இழந்த ஆடுகள்" மற்றும் "இழந்த நாணயங்கள்" ஆகியவற்றைத் தேடிச்செல்ல நாம் என்ன செய்கிறோம் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். "அந்த மக்களுக்காக" நம் இதயத்தில் ஒரு இடம் இருப்பது முக்கியம், கிறிஸ்துவுக்கான வழியைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவ நம்மால் முடிந்த அனைத்தையும் செய்து, அவர்கள் அவரிடம் திரும்பும்போது அவர்களுடன் கெம்பீரமாக சந்தோஷப்படுவோம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்!
More
We would like to thank Trinity New Life Church for this plan. For more information, please visit: http://www.trinitynewlife.com/