தேவன் _______மாதிரி

தேவன் இங்கே இருக்கிறார்
“...உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார். ஆமென்.”மத்தேயு 28:20
மனிதர்களோடு கூட நல்ல உறவில் இருப்பதையே தேவன் எப்போதும் விரும்புகிறார். தேவனின் இந்த விருப்பம், கடந்த காலங்களில் பலமுறை அவருடைய செயல்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆதியிலே, தேவன் ஆதாமோடும் ஏவாளோடும் ஏதேன் தோட்டத்தில் உலாவினார். என்றைக்கு பாவம் அவர்களுக்குள் பிரவேசித்ததோ, அப்போதே தேவனோடு கூட அவர்களுக்கு இருந்த உறவில் ஒரு விரிசல் ஏற்பட்டது. ஆனால், அவர்களோடுநெருக்கமாக் இருக்க விரும்பிய தேவனின் விருப்பத்தை அதனால் தடுக்க முடியவில்லை.
தேவனோடு கூடிய மனிதர்களுடைய உறவை சீரமைக்கும்படியாகவே, தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை இந்த பூமிக்கு அனுப்பினார். தாம் வந்த நோக்கத்தை நிறைவேற்றி பூமியை விட்டு செல்லும்போது இயேசு கூறிய வார்த்தைகளை தான் நாம் இப்போது வாசித்தோம். அவர் உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நம்மோடு கூடவே இருக்கிறார் என்ற வாக்குத்தத்த வார்த்தை. அதனினும் மேலான வாக்குத்தத்தமாக, பரிசுத்த ஆவியானவரை நமக்குள்ளாக அனுப்பவும் வாக்குத்தத்தம் பண்ணி சென்றார்.
கிறிஸ்துவை நாம் பின்பற்றும் போது, தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நம்மோடு கூட மாத்திரமல்ல, நமக்குள்ளாக இருக்கிறார். பழைய ஏற்பாட்டு நாட்களில், தேவ பிரசன்னத்தை அனுபவிக்க ஜனங்கள் தேவாலயத்திற்கு சென்றார்கள். ஆனால், புதிய ஏற்பாடு காலத்தில், தேவ பிரசன்னத்தை நமக்குள்ளாகவே அனுபவிக்கிறோம். காரணம், நாமே தேவன் வசிக்கும் ஆலயமாக இருக்கிறோம்.
நம்மோடு நெருங்கி உறவு கொள்வதே, உலக தோற்ற முதலாக தேவனுடைய விருப்பமாக இருந்திருக்கிறது. அது இயேசுவின் மூலமாக சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது. பரிபூரணமாக தேவ இராஜியத்தில் நாம் தேவனோடு கூட வாழ போகிற நாட்கள் வெகு சீக்கிரத்தில் இல்லை. அந்த நாளுக்காகவே நாம் காத்திருக்கிறோம். நாம் எதுவுமே செய்யாமல் காத்திருப்பதல்ல. இந்த காத்திருப்பின் காலத்தில், நமக்கு செய்ய வேண்டிய வேலைகள் உண்டு. தேவனே நமக்கு கொடுத்த வேலைகள்.
ஆதிமுதலே, மனிதன் இந்த பூமியை ஆட்சி செய்வதையே தேவன் விரும்பினார். அவருடைய விருப்பத்தை இந்த பூலோகத்தில் நிறைவேற்றுகிறவர்களாக நாம் இருப்பதற்காகவே நமக்கு பலவிதமான திறமைகளையும், தாலந்துகளையும் தேவன் கொடுத்திருக்கிறார். தேவன் நமக்கு இலவசமாக கொடுத்த இரட்சிப்பு என்பது, நாம் பரலோகம் செல்வதற்கான நுழைவு சீட்டு என்று மாத்திரம் நாம் எண்ணிவிட கூடாது. அது, இந்த பூமியில் நாம் அவருடைய வேலையை செய்து, தேவ இராஜியத்தை இந்த பூமியில் நிலைநிறுத்தும்படியாக அவர் நமக்கு கொடுத்திருக்கிற அழைப்பிதழ்.
தேவன் நமக்கு கொடுத்திருக்கும் இந்த வேலையை, நாம் நம்முடைய அற்பமான மனித பெலத்தோடு கூட செய்யவேண்டுவதில்லை. நாம் தேவனோடு கூட உடன்பங்காளிகளாக இணைந்து, அவர் சொல்வதை, அவருடைய பரிசுத்த ஆவியின் பெலத்தாலே செய்தாலே போதும். அவரையல்லாமல் நம்மால் இங்கே எதையுமே செய்ய கூடாது. ஆனால், தேவன் தங்கும் ஆலயமாக நாம் இருக்கிறோம் என்ற சத்தியத்தை அறிந்தவர்களாய், தேவனுடைய வல்லமையோடு நாம் காரியங்களை நடப்பிக்க துவங்குவோமானால், நிச்சயம் தேவனுக்காக நம்முடைய கற்பனைக்கு மிஞ்சின அநேக காரியங்களை நம்மால் சாதிக்க முடியும்.
நாம் அநேக வேளைகளிலே, தேவன் தொலைவில் இருப்பது போல உணர சோதிக்கப்படுகிறோம். நம்முடைய ஜெபங்களில் கூட சில நேரங்களில், "பரலோகத்தில் இருக்கும் தேவனே" என்று அவரை அழைக்கிறோம். ஆனால், நம்முடைய எங்கோ தொலைவில் இல்லை, அவர் இங்கே தான் இருக்கிறார்.
தேவன் தொலைவில் இல்லை, உங்களோடு கூட தான் இருக்கிறார், உங்களுக்குள் தான் இருக்கிறார் என்பதை நீங்கள் உணரும்போது தான், தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் நோக்கத்தையும், தரிசனத்தையும் இந்த உலகத்தில் உங்களால் நிறைவேற்ற முடியும். அவரை குறித்த நற்செய்தியை மற்றவர்க்கு அறிவித்து, அநேகரை அவருடைய நன்மைக்கு நேராக வழிநடத்துவது தான் அவர் உங்களை குறித்து வைத்திருக்கிற தரிசனம்.
ஜெபம்: அன்பு தகப்பனே, நீர் எனக்குள்ளாக வாசம் செய்யும்படியாக என்னை தெரிந்தெடுத்து அழைத்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். எனக்குள்ளாக இருக்கும் உம்முடைய பரிசுத்த ஆவியானவர், என்னை உம்முடைய செவ்வையான பாதையிலே நடத்தும்படி என்னை ஒப்புகொடுக்கிறேன். உம்முடைய இராஜியத்தை இந்த பூமியில் ஸ்தாபிக்கும் வேலையில் என்னால் எப்படி பங்களிக்க முடியும் என்பதை எனக்கு கற்றுத்தந்து, என்னை நடத்தும். தேவ இராஜியத்தில் என்னையும் உமக்கு உடன்பங்காளியாக தெரிந்தெடுத்திருக்கும் உம்முடைய கிருபைக்காக நன்றி. இந்த நாளில் உமது பிரசன்னத்தை தொடர்ந்து என் வாழ்வில் நான் அறிந்து அனுபவிக்க எனக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
சவால்: தேவ பிரசன்னத்தை சார்ந்து நீங்கள் நடக்கும்போது, ஆவியானவர் உங்களை செய்யும்படி உந்துகிற காரியம் என்பதை அறிந்து உணர நேரம் செலவிடுங்கள். அதை செய்ய பெலனையும், தைரியத்தையும் அவரிடமே கேளுங்கள்!
இந்த திட்டத்தைப் பற்றி

தேவன் யார்? எப்படிபட்டவர்? என்று கேட்டால், நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில்களை சொல்லுவோம். நமக்கே ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு பதில்கள் நம்முடைய எண்ணங்களில் தோன்றும். ஆனால், இவைகளில் எவை உண்மை, எவை உண்மை அல்லவென்று எப்படி அறிந்துகொள்ளுவோம்? நீங்கள் யாராய் இருந்தாலும், எப்படிப்பட்ட அனுபவத்தை உடையவராய் இருந்தாலும், எந்த திருச்சபையை சேர்ந்தவராக இருந்தாலும், தேவன் ஒருவர் இருக்கிறார், அவர் உங்கள் அருகில் இருக்கிறார், அவர் உங்களை சந்திக்க ஆவலுள்ளவராய் இருக்கிறார் என்பதை நீங்கள் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு முதல்படியாக போதகர் கிரேக் க்ரோஷல் அவர்களுடைய 'தேவன் _______' என்கிறதான இந்த 6 நாள் வேத தியான திட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவர் சர்வவல்லவர்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்
