சங்கீதம் 23மாதிரி

சங்கீதம் 23

12 ல் 8 நாள்

இயேசு உனக்கு ஆறுதலளிக்க விரும்புகிறார்!

“உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.” (வேதாகமத்தில் சங்கீதம் 23:4ஐ பார்க்கவும்)

அவரது கோலிற்காக நன்றி சொல்கிறேன், அதைக் கொண்டு ஒரு மேய்ப்பர் தமது ஆட்டை மென்மையாக சரியான பாதைக்கு திருப்புகிறார்.

நான் எத்தனை முறை வழி தவறி இருக்கிறேன்? எத்தனை முறை விழுந்திருக்கிறேன்? எத்தனை முறை தவறிழைத்திருக்கிறேன் மற்றும் பாவம் செய்திருக்கிறேன்?

ஆனாலும் தேவன், தமது தயவின் நிமித்தம், அன்பின் நிமித்தம், கிருபையின் நிமித்தம், தமது பாதைக்கு நேராக என்னைத் தமது கோலைக் கொண்டு திருப்பினார்…

அப்படியானால் தடி எதற்கு? அது பாதுகாக்கிறது, உறுதியளிக்கிறது. அது ஒருபோதும் ஆட்டை அடிக்கப் பயன்படுத்தப்படுவதில்லை: மாறாக வேட்டையாடும் மிருகங்களிடம் இருந்து ஆட்டைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகிறது.

“உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்.” (வேதாகமத்தில் 1 பேதுரு 5:8‭-‬9ஐ பார்க்கவும்)

“ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.” (வேதாகமத்தில் 1 யோவான் 4:4ஐப் பார்க்கவும்)

ஆறுதலடைவாயாக. இயேசு எப்போதும் உன்னைப் பாதுகாத்து வழி நடத்துவார். அவர் இப்பொழுதே அப்படி செய்கிறார்!

நாள் 7நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

சங்கீதம் 23

சங்கீதம் 23ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார். இது உலகத்தில் அநேக மக்களின் இதயத்தை தொட்ட அத்தியாயம் என்பதில் சந்தேகமில்லை. இந்த வார்த்தையின் செய்தி உனக்கு ஒரு அபரிவிதமான ஆசீர்வாதத்தின் ஊற்றாக இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=psalm23