கவலை பற்றி வேதம் சொல்லும் 7 விஷயங்கள்மாதிரி
சில நேரங்களில் நீங்கள் கட்டுப்படுத்தவோ அல்லது கணிக்கவோ முடியாத விஷயங்கள் நடக்கும். நீங்கள் அவற்றை பற்றி அதிகம் சிந்தித்து நேரத்தை செலவிடும்போது கவலை ஏற்படுகிறது. நீங்கள் ஒரு காலக்கெடுவைப் பற்றியோ அல்லது எந்த காரணமும் இல்லாமல் மிகைப்படுத்தப்பட்ட கவலையால் நீண்டகாலமாக கவலைப்படுகிறீர்களோ, நீங்கள் தனியாக இல்லை. உங்களால் கற்பனை செய்ய முடியாவிட்டாலும், குழப்பத்தின் மத்தியில் அவருடைய குரலைக் கேட்க நீண்ட நேரம் காத்திருபவர்களுக்கு கடவுள் நிரம்பி வழியும் நம்பிக்கையை வைத்துவைத்திருக்கிறார்.
ரோமர் 15:13 அப்போஸ்தலனாகிய பவுலிடமிருந்து ரோமில் உள்ள சில கிறிஸ்தவர்களுக்கான பிரார்த்தனை, ஆனால் நீங்கள் அந்த் பிரார்த்தனையை கேட்டால், கடவுளின் குரல் உங்களுடன் பேசுவதை நீங்கள் கேட்கலாம். "நம்பிக்கையின் கடவுள்" என்று குறிப்பிடுகையில் பவுல் தனது வார்த்தைகளை கவனமாக தேர்வு செய்கிறார். நீங்கள் அதைப் பிடித்தீர்களா? நம்பிக்கை கடவுளின் இயல்பு. ஆனால் பவுல் அவர்களின் கவலையை வெறுமனே அகற்றும்படி கடவுளிடம் கேட்கவில்லை. கடவுளால் கவலையை முற்றிலும் அகற்ற முடியுமா? நிச்சயமாக, ஆனால் ரோமானியர்கள் தங்கள் சிந்தனையை மாற்றாவிட்டால் அதே நம்பிக்கையற்ற நிலைக்கு திரும்பி வருவார்கள் என்று அவர் அறிந்திருந்தார். அதற்கு பதிலாக, "எல்லா மகிழ்ச்சியினாலும் சமாதானத்தினாலும்" நிரப்பும்படி அவர் கடவுளிடம் கேட்டார், ஏனென்றால் நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியினாலும் சமாதானத்தினாலும் நிரப்பும்போது, பதட்டத்திற்கு இடமில்லை.
இது இன்னும் அவ்வளவு எளிதல்ல. கடவுள் ரோமர்களை முடிவில்லாமல் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் அளித்து, அவர்களின் ஆன்மீகத் தொட்டிகளை எப்போதும் நிரப்பி வைத்து, கவலை மறைந்திருக்க இடமில்லாமல் செய்ய முடியும். ஆனால் அவர்கள் மனநலப் பழக்கத்தை மாற்றாவிட்டால், மகிழ்ச்சியும் அமைதியும் இறுதியில் பதட்டத்திற்கு வழிவகுக்கும் என்பதை கடவுள் அறிந்திருந்தார். ஆகவே, பரலோகத்தின் மகிழ்ச்சியையும் அமைதியையும் கட்டவிழ்த்துவிடுவதற்கு முன்பு அவருக்கு ஒரு விஷயம் தேவைப்பட்டது. அந்த வாக்கியத்தின் அடுத்த பகுதி "விசுவாசத்தினால் உண்டாகும்" என்று கூறுகிறது.
இப்போது பார்க்கிறீர்களா? பதட்டத்தை உடைக்கும் வெள்ளமாகிய அமைதி மற்றும் மகிழ்ச்சியை தடுத்து நிறுத்தும் கதவின் திறவுகோல் நம்பிக்கை. நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா? மேலோட்டமான, உதடு-சேவை நம்பிக்கை மட்டுமல்ல - ஆனால் நீங்கள் இறுக்கமாகப் பிடித்திருக்கும் அனைத்திலிருந்தும் உங்கள் கைகளை எடுக்க அனுமதிக்கும் நம்பிக்கை.
நம்முடைய ஆழ்ந்த நம்பிக்கைக்கு கடவுள் தகுதியானவர். நீங்கள் அவரை நம்பும்போது, அவர் உங்களை மிகுந்த மகிழ்ச்சியினாலும் சமாதானத்தினாலும் நிரப்புகிறார், நீங்கள் நம்பிக்கையுடன் நிரம்பி வழிகிறீர்கள். அந்த உணர்ச்சி எப்படிபட்டது என்பது உங்களுக்குத் தெரியாதிருக்கலாம், அதனால் கடவுளை நம்புவது மிகவும் கடினமாக இருக்கலாம். ஆனால் விசுவாசத்தின் சாராம்சம் நம்முடைய பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியேறி, அடுத்து என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாதபோது, பணயம் வைத்து முடிவு எடுப்பது.
நீங்கள் பிடித்து பற்றி கொண்டிருக்கிறவைகளிலிருந்து உங்கள் கைகளை அகற்றி, இன்று கடவுளை நம்புவதற்கான தைரியத்தைக் கண்டுபிடிக்க முடியுமா?
மைக்கேல் மார்ட்டின்
YouVersion இனையதள வடிவமைப்பாளர்
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஒவ்வொரு நாளுக்கும் நம் வாழ்க்கையில் சிக்கலான புதிய சவால்களை அறிமுகப்படுத்தும் ஆற்றல் உள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு புதிய நாளும் நமக்கு அற்புதமான புதிய வாய்ப்புகளையும் வழங்கும். இந்த ஏழு நாள் தியானத்தில், YouVersion-இல் உள்ள ஊழியர்கள், இன்று நீங்கள் எதிர்கொள்ளும் எல்லாவற்றிற்கும் கடவுளின் வார்த்தையிலிருந்து உண்மைகளைப் பயன்படுத்த உதவுகிறார்கள். ஒவ்வொரு நாளின் தியானத்திலும், கடவுள் உங்களிடம் பேசுவதைப் பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் வசன படம் இணைக்கப்பட்டுள்ளது.
More