வருகை: கிறிஸ்துமஸ் பயணம்மாதிரி
![Advent: The Journey to Christmas](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F13463%2F1280x720.jpg&w=3840&q=75)
நெடுங்கால காத்திருப்பு காண பதில்
"நெடுங்காலமாய் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்", என்னும் பழமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்கள். தேவன் நீண்ட காலமாக கொடுத்திருந்த நம்பிக்கைக்கு பதிலாக இயேசு பிறந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆதியாகமத்தில், ஆபிரகாமும் அவருடைய மனைவி சாராவும் ஒரு குழந்தைக்காக பல வருடங்கள் காத்திருந்தார்கள், ஆனால் சாராவால் கருத்தரிக்க முடியவில்லை. சாராளுக்கு 90 வயதாக இருந்தபோது, தேவன் ஆபிரகாமுக்குத் தோன்றி, சாராள் ஒரு மகனைப் பெற்றெடுப்பார் என்றும், இந்த குழந்தையின் மூலம், அவருக்கும் ஆபிரகாமின் சந்ததியினருக்கும் இடையே ஒரு நித்திய உடன்படிக்கையை ஏற்படுத்துவார் என்றும் உறுதியளித்தார். தேவன் இதைச் சொன்னபோது சாராள் உண்மையில் சிரித்தார், ஏனென்றால் "என்னைப் போன்ற ஒரு பெண்க்கு இன்பம் உண்டாய் இருக்குமோ?" என்று நினைத்தாள். ஆனாலும் சாராள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். ஆபிரகாம் அவனுக்கு "ஈசாக்கு" என்று பெயரிட்டார், அதாவது "நகைப்பு" என்று பொருள், ஏனென்றால் தேவன் சாராளுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மீட்பையும் கொண்டு வந்தார்.
ஈசாக்கின் மகன் யாக்கோபு, யாக்கோபுக்கு 12 மகன்கள் இருந்தனர், அவர்களில் ஒருவர் யூதா. யூதாவின் கோத்திரத்திலிருந்து தாவீது ராஜா வந்தார், இயேசுவின் தாய் மரியாள் தாவீதின் வம்சத்தில் இருந்ததால் (அவருடைய பூமிக்குரிய தந்தை யோசேப்பு), இரட்சகர் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் தேவனின் வாக்குத்தத்தத்தின் பலனாக வந்தார். கடவுள் சாராவின் உடலைக் குணமாக்கி, அவளுடைய இருதயத்தின் விருப்பத்தை நிறைவேற்றியபோது, அவர் ஒரு விதைகளை போட்டார், அவர் இறுதியில் மனிதகுலத்தை தனக்குள்ளேயே சரிசெய்து, என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரு உடன்படிக்கையை நிறுவினார். சாராளின் வயதான காலத்தில் பெற்றெடுக்கும் திறன், இயேசுவின் பிறப்பின் அற்புதமான கதையைப் பார்த்து ஆச்சரியப் படுவதற்கு மற்றொரு காரணத்தைத் தருகிறது.
நீங்கள் இன்று நீண்டகாலமாக நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்களா, இந்த காத்திருப்புக்கு ஒரு முடிவை தேவன் கொண்டு வருவார் என நம்புங்கள் மேலும் நீங்கள் கற்பனை செய்வதை விட நல்ல முடிவை கொடுப்பார். இதன் நோக்கத்தை இப்போது நீங்கள் காண முடியாது என்றாலும், ஒரு நாள், நீங்கள் பார்ப்பீர்கள். சாராளை போல, தேவனின் வாக்குத்தத்தத்தை பிடித்துக் கொள்ளுங்கள்! “விரும்பினது வரும்போது ஜீவ விருட்சம் போல் இருக்கும்” என்பதை உங்கள் வாழ்வில் அனுபவிப்பீர்கள்.
ஜெபம்: பிதாவே, சாராளுக்கு நீர் கொடுத்த வாக்குத்தத்தத்தை நீர் நிறைவேற்றியது போல, நீர் எனக்கு அளித்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவீர்க என்று நான் நம்புகிறேன். எனது வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை ஒரு பெரிய நோக்கத்திற்காகப் பயன்படுத்தியதற்கு முன்கூட்டியே நன்றி சொல்கிறேன். நான் உமக்கு மகிமை சேர்ப்பதனால் சந்தோஷம் கொள்கிறேன்.
இந்த திட்டத்தைப் பற்றி
![Advent: The Journey to Christmas](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F13463%2F1280x720.jpg&w=3840&q=75)
உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தம் கண்டறிய அடுத்த 25 நாட்களில் ஒரு பயணத்தை மேற்கொள்வோம்.
More