திட்ட விவரம்

தூக்கமின்மைமாதிரி

தூக்கமின்மை

5 ல் 3 நாள்

அவர் பேசுவது உனக்குக் கேட்கிறதா?

"நீ பேசும் போது எதிர்பாராத விதமாக நான் குறுக்கிட்டுப் பேசினால் எப்படி இருக்கும்? இப்போது நீ பேசிக் கொண்டிருக்கிறாய் என்பதால், நான் அமைதியாக இருக்க வேண்டும் என்று நீ விரும்பினால் என்ன செய்வது?"

எனக்குத் தூக்கம் வராமல் இருந்த இரவு நேரங்களில் நான் சில பாடல் வரிகளை எழுதியுள்ளேன். இரவு நேரங்களில் ஆண்டவர் என்னுடன் பேச விரும்புகிறார் என்பதை அப்போது நான் நன்றியுடன் அறிந்துகொண்டேன்.

சாமுவேல் மற்றும் ஏலி சம்பவத்தை வேதாகமத்தில் வாசித்திருக்கிறாயா? வேதாகமத்தில் உள்ள இந்த சம்பவமும் நடு இராத்திரியில் நடந்த ஒன்றுதான். ஏலி படுக்கைக்குச் சென்றுவிட்டான், சாமுவேலும் தூங்கிக்கொண்டிருந்தான். "அப்பொழுது கர்த்தர் சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன் இதோ, இருக்கிறேன் என்று சொல்லி, ஏலியினிடத்தில் ஓடி, இதோ, இருக்கிறேன். என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான். அவன் போய்ப் படுத்துக்கொண்டான்'..." (1சாமுவேல் 3:4-5)

ஏலி என்னை அழைத்திருந்தால் நான் இவ்வளவு சீக்கிரம் படுக்கையிலிருந்து குதித்து எழுந்திருப்பேனா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. "தயவுசெய்து என்னை தூங்க விடுங்கள்!" என்று நான் கூறியிருக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு! :-)

ஆனால் அதுதான் சாமுவேலுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியது! இந்தக் காட்சி தொடர்ச்சியாகத் திரும்பத் திரும்ப பலமுறை நடந்தது, ஒவ்வொரு முறையும் சாமுவேல் விரைவாகப் பதிலளிக்கச் சென்றான். ஆண்டவர் தன்னைக் கூப்பிடுகிறார் என்பதை அறிந்ததும், அவன், "... சொல்லும். அடியேன் கேட்கிறேன்" என்றான்!. (1 சாமுவேல் 3:10, )

ஆண்டவர் அதற்குப் பதிலளித்து, முன்பு ஏலியிடம் சொல்லியிருந்ததை, சாமுவேலிடத்தில் கூறினார். இருப்பினும், ஏலி அதற்குச் செவி கொடுத்து ஆண்டவருடைய வார்த்தையின்படி நடக்கவில்லை. ஆனால் சாமுவேலோ அந்த வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி செயல்பட்டான், அது எல்லா விதத்திலும் வித்தியாசத்தை ஏற்படுத்தியது! ஆண்டவர் பேசும் போது,​ அது உன் வாழ்க்கையை மாற்றுகிறது!

நான் சொன்னதுபோல், நீ ஏற்கனவே சோர்வாகவும் தூங்க முடியாமல் கோபமாகவும் இருக்கும்போது, அது எவ்வளவு கடினமான சூழ்நிலை என்று எனக்குத் தெரியும். ஆனால் அந்தத் தருணத்தை உன்னுடன் தனிப்பட்ட முறையில் பேச ஆண்டவர் பயன்படுத்த விரும்பினால் என்ன? ஒருவேளை அந்த ஒரு தருணம் மட்டுமே, ஆண்டவர் பேசுவதை நீ கேட்கும்படிக்கு, உன் வாழ்க்கையில் சத்தம் இல்லாத ஒரே தருணமாக இருக்கலாம்…

அந்தக் குறிப்பிட்ட தூக்கம் வராத இரவு நேரத்தில், ஆண்டவர் என் தூக்கத்தை பறிக்க முயலவில்லை… அதற்குப் பதிலாக, எனக்கு ஒரு பாடலைக் கொடுத்தார் என்பதை உணர்ந்துகொண்டதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சாமுவேலைப் போல நான் அதற்காக எழுந்திருக்க வேண்டிய அவசியமில்லை... என்னால் படுத்துக்கொண்டும் பாடலை எழுத முடியும்.

ஒரு தூக்கமில்லாத இரவில், நீ ஆண்டவருக்கு கீழ்ப்படிந்து அவருடைய சத்தத்தை கேட்பதால், உன் வாழ்வில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? அப்படியானால் நீ நிச்சயம் கீழ்படிவாய், அல்லவா?

நீ ஒரு அதிசயம்!

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

தூக்கமின்மை

தூக்கமில்லாத இரவுகளை நீ சந்தித்த அனுபவம் உனக்கு உண்டா? போதிய அளவு தூங்க வேண்டும் என்று நீ நினைக்கும்போது, அது நடக்கவில்லை என்றால் என்ன செய்வது? இப்படி எனக்கு பல முறை நடந்ததுண்டு. மனச்சோர்வுடன் போராடியபோதும் அதற்குப் பிறக...

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்