அனைத்தையும் கொடுத்து, அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளுவதுமாதிரி

செல்வந்தனாக நிலைத்திருத்தல்
உங்களில் சிலருடைய வாழ்க்கை என்னுடைய வாழ்க்கைக்கு ஒத்திருக்கலாம். உங்கள் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டீர்கள், எப்படி நன்றாக முடித்துவிட்டு, உங்கள் குடும்பத்தையும், அவர்கள் தலைமுறை தலைமுறையாகப் பழகுபவர்களையும் ஆசீர்வதிக்கும் ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களில் சிலர் வாழ்க்கையைத் தொடங்கி, அந்தக் கனவுகள் மற்றும் திட்டங்களை நோக்கி உங்கள் முதல் அடிகளை எடுத்து வைக்கிறீர்கள்.
நீங்கள் வாழ்க்கையின் முடிவில் இருந்தாலும் சரி, தொடக்கத்தில் இருந்தாலும் சரி, மூன்று விஷயங்களைச் செய்யும்படி நான் உங்களுக்கு சவால் விட விரும்புகிறேன்:
- உங்கள் முழு இருதயத்தோடு கடவுளுக்காக வேலை செய்யுங்கள், மனிதர்களுக்காக அல்ல.
- உங்கள் திட்டங்களை எளிமையானதாக வைத்திருங்கள், ஏனென்றால் கர்த்தர் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாது.
- உங்கள் பாரம்பரியம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை இப்போது கருதுங்கள். தொடங்குவதற்கான காலம் இது.
நாம் இளமையாக இருக்கும்போது, எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் அல்லது எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரு மந்திர திறவுகோல் வாழ்க்கையில் இருப்பதாக சில சமயங்களில் நாம் நினைக்கிறோம். வாழ்க்கையில் ஏதோ பெரிய ரகசியம் இருப்பதாகவும், எப்படியாவது வெற்றியைக் கண்டால், வாழ்க்கையின் அனைத்து மர்மங்களையும் திறக்கும் இந்த திறவுகோலை அடைவோம் என்று நினைப்பது எளிது. ஆனால் இப்போது வாழ்க்கை அனுபவம் பெற்ற ஒருவராக, அதை விட இது மிகவும் எளிமையானது என்று என்னால் சொல்ல முடியும்: கடவுள் உங்களுக்கு முன் வைப்பதில் உண்மையாக இருங்கள், பரலோக விஷயங்களில் முதலீடு செய்யுங்கள்.
இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் நீங்கள் விட்டுச் செல்லும் பாரம்பரியத்தை பாதிக்கும். நீங்கள் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலும் உலகம் பார்க்கும் வெற்றியை எதிர்கொள்ளும் ஒரு இளம் தொழிலதிபராக இருந்தாலும் சரி, அல்லது சமீபத்தில் பட்டம் பெற்ற ஒரு இளம் பெண்ணாக இருந்தாலும் சரி, உங்கள் முன் என்ன இருக்கிறது என்று தெரியாது. கடவுளுக்கு எல்லாம் சொந்தம் என்ற உண்மையின் வெளிச்சத்தில் உங்கள் முடிவுகளை எடுங்கள். இந்த உலகில் உங்கள் வாழ்க்கையை வாழும் போதே, உங்கள் செல்வத்தை அடுத்த உலகில் முதலீடு செய்யுங்கள்.
விண்ணப்பம்: இன்று உங்கள் வாழ்க்கையைப் பரிசீலிக்கும்போது, நீங்கள் முதலீடு செய்யும் பொருட்கள் மற்றும் நபர்களில், நித்தியம் வரை எது நிலைத்திருக்கும்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

புத்தகத்திலிருந்து ஒரு மேற்கொள் "எல்லாவற்றையும் கொடுத்து, அதை மீண்டும் பெற்றுக் கொள்ளுவது". Hobby Lobbyயின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான டேவிட் கீரின், உதாரத்துவமான வாழ்க்கை, சிறந்த பலனை தனிப்பட்ட வாழ்க்கையிலும், சக்தி வாய்ந்த பாரம்பரியத்தை குடும்பத்திற்கும், நாம் சந்திக்கிற அனைவரையும் மாற்றுகிற சக்தியையும் உடையது என்று பகிர்ந்து கொள்ளுகிறார்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்

ஆண்டவர் சர்வவல்லவர்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்
