தேவனுடைய சர்வாயுதவர்க்கம்மாதிரி
சத்தியம் என்பது விசுவாசம் நிறைந்த வாழ்வின் முழு பிரச்சினையும் தாங்கியிருக்கும் கொக்கி. உங்களுக்கு சத்தியம் என்னவென்று தெரியாவிட்டால், அதனுடன் இணைந்து செயல்படுவது எப்படி என்பதை நீங்கள் ஒருபோதும் அறிய முடியாது. எனவே தேவனின் தன்மை மற்றும் அவருடைய வார்த்தையின் சத்தியம், நம்முடைய நம்பிக்கை செழித்து வளர உதவுகிறது.
தேவனின் சத்தியமே, தேவன் மீது நாம் கொண்டுள்ள விசுவாசத்தை மதிப்புக்குரியதாக்குகிறது. சத்தியம் இல்லாமல், நம்முடைய விசுவாசக் கேடயத்தை உறுதியுடன் பற்றிக்கொள்ள முடியாது. ஆகவே, நம்முடைய விசுவாச வாழ்வை பொறுப்புடன் வாழ விரும்பினால், தேவனின் சத்தியத்தையும், அவருடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனையும் பற்றி அறிந்துகொள்வது மிக முக்கியம், மேலும் நம்முடைய கேடயங்களால் பாதுகாக்கப்படுவதன் பலன்களை அனுபவிக்கலாம்.
தேவனின் சத்தத்தை தெளிவாகவும் துல்லியமாகவும் கேட்பதன் முக்கியமான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டாமல் விசுவாசத்தைப் பற்றிய எந்தவொரு விவாதமும் முழுமையடையாது.
நாம் கவனமாக இல்லாவிட்டால், விசுவாசம் எளிதில் முட்டாள்தனமாக மாறும்—விசுவாசத்தின் பெயரால் செய்யப்படும் விவேகமற்ற, மனக்கிளர்ச்சி, பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான நடத்தையாக மாறிடும். ஆனால் உண்மையான விசுவாசம் எப்போதுமே தேவனின் வார்த்தையின் அஸ்திவாரத்தில் கட்டப்பட வேண்டும், ஏனெனில் அவருடைய ஆவி அதை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்த உங்களை வழிநடத்துகிறார். விசுவாசத்திற்கும் முட்டாள்தனத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்? இரண்டுக்கும் இடையிலான எல்லையைத் தாண்டுவதை எது தடுக்கிறது?
விசுவாசிகளாகிய, நாம் ஜெபத்தோடு அதைத் தேடும்போது அவருடைய வழிநடத்துதலை அறிந்துகொள்ளும் பாக்கியம் நமக்கு கிடைக்கிறது. அவர் சத்தியத்தை நமக்குக் காண்பிப்பதற்கும், நாம் எடுக்க வேண்டிய அடுத்த கட்டத்திற்கு அவருடைய வழிநடத்துதலை நமக்குக் கொடுப்பதற்கும் அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். உண்மையில், விசுவாசத்தின் கேடயத்தால் பாதுகாக்கப்பட்ட ஒரு வாழ்க்கை முறையை நாம் பின்பற்றும்போது, சமநிலையுடன் இருக்க உதவுவதற்காக, அடுத்த கட்டத்தில் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இருப்பது மிகவும் முக்கியமானது.
ஒரு விஷயத்தைப் பற்றி தேவனின் சத்தியம் அல்லது தேவனின் வாக்குத்தத்தை நீங்கள் தெளிவாக அறிந்தவுடன், அதனுடன் இணக்கமான வழியில் முன்னேற வேண்டிய நேரம் அது. கவனமாகக் கேளுங்கள் - உங்கள் செயல்களை தீர்மானிக்கும் காரணியாக உங்கள் உணர்வுகள் இருக்க முடியாது. உணர்வுகள் மற்றும் வெளிப்புற தூண்டுதல்களுக்கு உட்பட்டவை மாறும். விசுவாசத்தில் செய்யப்படும் செயல்கள் இன்னும் உறுதியான மற்றும் நிலையான ஒன்றில் தொகுக்கப்பட வேண்டும்.
நமது தேவனானவர் உண்மையுள்ள வர்த்தக மற்றும் நம்பத்தகுந்தவர்.
அவர் எப்போதும் இருக்கிறார்—சாத்தானை விட பலத்தில் அதிகமானவர்—நமது பதற்றமான ஜெபங்களைக் கேட்க, அவருடைய பயமற்ற வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்தவும், அவருடைய திசையில் சீராக நடக்க நமக்குத் தேவையான விளக்குகளை வழங்கவும். போர்வீரர்களே, கேடயத்தை எடுங்கள். நாம் விசுவாசத்தில் நடக்கிறோம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
தினந்தோறும், முழுநேரமும் உங்களை சூழ்ந்தபடி - கண்ணுக்கு புலனாகாத, கேள்விப்படாத, ஆனாலும் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உணரக்கூடிய ஒரு போர் சீற்றமடைகிறது. மிக அர்பணிப்புமிக்க, அந்தகாரமான சத்துரு ஒருவன் உங்களுக்கு முக்கியமென்று இருக்கும்: உங்கள் இருதயம், உங்கள் சிந்தனை, உங்கள் மணவாழ்க்கை, உங்கள் குழந்தைகள், உங்கள் உறவுகள், உங்கள் எதிர்ப்புத்திறன், உங்கள் கனவுகள், உங்கள் விதி போன்ற எல்லாவற்றிலும் அழிவை ஏற்படுத்த வகைதேடுகிறான். இருப்பினும் அவனுடைய போர்த்திட்டம் உங்களை நிராயுதபாணியாக எதிர்பாராதநிலையில் பிடிப்பதை சார்ந்துள்ளது. நீங்கள் அங்குமிங்குமாக தள்ளப்படுவதால் சோர்ந்தும் உங்கள் பாதுகாப்பு இல்லாமலும் பிடிபடுகிறீர்களென்றால், இந்த தியானம் உங்களுக்கானது. சத்துருவானவன் தருணத்திற்கேற்றபடி உடையணிந்த ஒரு பெண்ணை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் பரிதாபமாக தோற்றுப்போகிறான். தேவனுடைய சர்வாயுதவர்க்கம், ஒரு விசுவாசியின் இருப்புகளின் வேதவிளக்கம் என்பதிலும் மேலாக, அதை உடுத்திக்கொண்டு தனித்த்துவமான போர்த் தந்திரங்களை உருவாக்கி ஜெயத்தை சுதந்தரித்துக்கொள்ள உதவும் ஒரு செயல் திட்டமாகும்.
More