குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்மாதிரி

இது எல்லாமே சமநிலையான ஒரு கேள்வி!
ஆண்டவருடனான வாழ்க்கை சமநிலையான முடிவில்லாத ஒரு கேள்வியாக இருக்கிறது: நம்முடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டன; இருப்பினும், மேலும் பாவம் செய்யாமல் இருக்க ஆண்டவர் நமக்கு உதவுகிறார். நாம் ஆண்டவரின் நிரந்தர கிருபையில் வாழ்கிறோம்; ஆனாலும், பாவம் செய்யாத நீதியான வாழ்க்கை வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
இங்கே, ஆண்டவருக்காக நீ என்ன செய்கிறாய் என்பது முக்கியமல்ல; அவருக்கு நீ யார் என்பதே மிக முக்கியமானது. உன் செயல்களே உன்னில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, மற்றும் நீ யார் என்பதைத் தீர்மானிக்கிறது.
எனவே, ஒரு தடகள வீராங்கனை விளையாட்டுகளை விளையாடும்போது மட்டுமே தடகள வீராங்கனையாக அறியப்படுகிறார். துணிச்சலான ஒருவர் மட்டுமே தைரியமாக இருக்கிறார். ஏனென்றால் அவர் தனது அச்சங்களைக் களைந்து தனது பாதுகாப்பு எல்லையைவிட்டு வெளியே வருகிறார். முக்கியமான காரியம் என்னவென்றால், கிரியையில்லாத நமது விசுவாசம் செத்ததாய் இருக்கிறது.
"...அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது." (யாக்கோபு 2:26)
நீ யார் என்பது மிக முக்கியமான விஷயம்: நீ ஆண்டவரின் பிள்ளை! ஆனால் இதற்கு உறுதியான ஆதாரத்தைக் கொண்டிராமல் இருக்க முடியாது, அப்படிப்பட்ட உறுதியான ஆதாரங்களில் சிலவற்றை நாம் இங்கே காணலாம்:
- ஜெபத்தின் மூலம் ஆண்டவருடன் தொடர்புகொள்ளுதல்,
- அவரைப் பற்றிப் பேசுதல்,
- அவருடைய வார்த்தையை வாசித்தல்,
- அவரை ஆராதித்தல்,
- கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுடன் ஐக்கியங்கொள்ளுதல்,
ஒரு கிறிஸ்தவராக, தகுதியற்ற நம் வாழ்க்கைக்குக் கிடைக்கும் கிருபைக்கும் கிரியையில்லாத விசுவாசத்துக்கும் இடையில் சமநிலை தேவைப்படுகிறது. இது ஒரு பைக் ஓட்டக் கற்றுக்கொள்வது போன்றதாகும்: ஆரம்பத்தில், நீ ஒரு பக்கமாக சாய்ந்து பைக் ஓட்டுகிறாய், இறுதியில் நீ சமநிலைப்படுத்துவது எப்படி என்பதைத் தெரிந்துகொண்டு வண்டியை ஓட்டுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்கிறாய். பின்பு நீ முன்னோக்கிச் செல்ல இது உனக்கு உதவுகிறது.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நீங்கள் எப்போதாவது உங்களை நீங்களே குற்றப்படுத்தியிருக்கிறீர்களா? உங்களது தவறுகளின் மீது தொடர்ந்து கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறீர்களா? தொடர்ந்து நம் மீது குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பதுதான் பிசாசின் நோக்கம். அவன் சகோதரர்கள் மீது குற்றம் சாட்டுபவன் என்று அழைக்கப்படுகிறான். அவன் இரவும் பகலும் நம் மீது குற்றம் சாட்டுபவனாய் இருக்கிறான். சத்துருவின் இந்தத் திட்டம், நம்மைக் குறித்த ஆண்டவரது திட்டம் அல்ல! நீங்கள் உங்களையே மன்னிக்க வேண்டுமானால், எங்கு மனிக்கத் தொடங்குவது என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்றால், இந்த வாசிப்புத்திட்டத்தை வாசிக்கும்படி நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நீங்கள் எல்லாக் குற்றங்களுக்கும் நீங்கலாகி, சகல பரிமாணங்களிலும் மன்னிப்பை அனுபவிக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். இன்றே அவருடைய சமாதானத்தைப் பெற்றுச் செல்லுங்கள்!
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=carryingoutguilt
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

ஆண்டவருடன் ஒரு உறவை வளர்த்துக்கொள்

ஈஸ்டர் என்பது சிலுவை - 4 நாள் வீடியோ திட்டம்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்

கவலையை மேற்கொள்ளுதல்

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்
