BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்மாதிரி

முதல் நூற்றாண்டில், மத்திய தரைக்கடலைச் சுற்றியுள்ள பெரும்பாலான மக்கள் ரோம பேரரசால் ஆளப்பட்ட நெருக்கமான பட்டணங்களில் வாழ்ந்தனர். ஒவ்வொரு பட்டணமும் கலாச்சாரங்கள், இனங்கள் மற்றும் மதங்களின் மாறுபட்ட கலவையாக இருந்தது. இதன் காரணமாக, எல்லா வகையான தெய்வங்களுக்கும் பலியிடுவதற்காக எல்லா வகையான ஆலயங்களும் இருந்தன, மேலும் யார் மீது அவர்கள் விசுவாசம் கொண்டார்களோ அவர்கள் ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு தெய்வங்கள் இருந்தன. ஆனால் ஒவ்வொரு பட்டணத்திலும் இந்தத் தெய்வங்களை வணங்காத சிறுபான்மை குழுக்களையும் நீங்கள் காணலாம். யூதர்கள் என்றும் அழைக்கப்படும் இஸ்ரவேலர் ஒரு மெய்யான தேவன் இருப்பதாகக் கூறி, அவரை மட்டும் வணங்க முயன்றார்கள்.
இந்த பட்டணங்கள் அனைத்தும் ரோம சாம்ராஜ்யத்தால் கட்டப்பட்ட சாலைகளால் இணைக்கப்பட்டிருந்தன, எனவே வணிகம் செய்வதும் புதிய விஷயங்களைப் பரப்புவதும் எளிதாக இருந்தன. அப்போஸ்தலனாகிய பவுல் தனது வாழ்க்கையின் இரண்டாவது பாதியை இந்த சாலைகளில் பயணித்தார், இஸ்ரவேலின் தேவன் தேசங்களின் மீது ஒரு புதிய ராஜாவை நியமித்ததாக அறிவித்தார், அவர் பலத்தோடும் ஆக்கிரமிப்போடும் ஆட்சி செய்யவில்லை, மாறாக சுய அர்ப்பணிப்போடும் அன்போடும் ஆட்சி செய்கிறார். ராஜா இயேசுவின் அன்பான ஆளுகையின் கீழ் வாழ எல்லா மக்களையும் அழைத்ததால் பவுல் இந்தச் செய்தியின் முக்கிய அம்சமாக பணியாற்றினான்.
பவுலின் பயணங்களின் சம்பவங்கள் மற்றும் மக்கள் அவருடைய சுவிஷேசத்தைஎவ்வாறு பெற்றார்கள் என்பது அப்போஸ்தலருடைய நடபடிகளின் மூன்றாம் பகுதி பற்றியது ஆகும். இந்தப் பிரிவில், பவுலும் அவனுடைய சக ஊழியர்களும் தங்கள் சொந்த ஊரான அந்தியோகியா பட்டணத்திலிருந்து, பேரரசு முழுவதும் உள்ள முக்கிய பட்டணங்களுக்கு எப்படி நகர்ந்தார்கள் என்பதை லூக்கா நமக்குக் காட்டுகிறார். ஒவ்வொரு பட்டணத்திலும், எபிரேய வேதாகமத்தின் மேசியானிய நிறைவேற்றமாக இயேசு எப்படி இருந்தார் என்பதைத் தனது மக்களுக்குக் காட்ட யூதர்களின் ஜெப ஆலயத்திற்கு முதலில் செல்வது பவுலின் வழக்கமாகும். சிலர் அவனுடைய சுவிஷேசத்தை விசுவாசித்து இயேசுவின் ஆட்சியின் கீழ் வாழத் தொடங்கினர், ஆனால் மற்றவர்கள் பவுலின் சுவிஷேசத்தை எதிர்த்தனர். சில யூதர்கள் பொறாமைப்பட்டு, சீஷர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள், அதே சமயம் யூதரல்லாத சிலர் தங்கள் ரோம வாழ்க்கை முறை அச்சுறுத்தப்படுவதாக உணர்ந்ததோடு சீஷர்களை விரட்டியடித்தார்கள். ஆனால் எதிர்ப்பு ஒருபோதும் இயேசுவின் சுவிஷேச த்தை நிறுத்தவில்லை. உண்மையில், துன்புறுத்தல் நிஜமாகவே புதிய பட்டணங்களுக்கு முன்னோக்கிச் செல்ல வேலை செய்தது. மகிழ்ச்சியுடனும், பரிசுத்த ஆவியுடனும் நிரம்பி சீஷர்கள் தொடர்ந்து சென்றார்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய பைபிள் ப்ராஜெக்ட்டுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். கூடுதல் தகவல்களுக்கு, இந்த இணையதளத்தை காண அழைக்கிறோம்: www.bibleproject.com