திட்ட விவரம்
BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்மாதிரி
![BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F24541%2F1280x720.jpg&w=3840&q=75)
லூக்காவின் இந்த அடுத்தப் பகுதியில், தேவனின் தலைகீழான ராஜ்யத்தில் வாழ்வதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி ஆவிக்குரிய பார்வையைத் தொடர்ந்து அளிப்பதால் இயேசு குருடர்களுக்குப் பார்வையைத் தருகிறார். ஆனால் எவரும் ஜெபத்துடனும் ஏழைகளிடம் தாராள மனப்பான்மையுடனும் ராஜ்யத்தில் வாழத் தொடங்குவதற்கு முன்பு, அவர்கள் முதலில் அதற்குள் பிரவேசிக்க வேண்டும். தேவனை முழுமையாக விசுவாசிப்பதற்கு அவர்கள் தங்களைத் தாழ்த்திக் கொள்ளாவிட்டால் யாரும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது. சிலர் தன்னை விசுவாசிக்கிறார்கள்,இதைப் புரிந்து கொள்ளவில்லை, எனவே அவர் இந்த உவமையைச் சொல்கிறார். இது இப்படி செல்கிறது.
ஒரு நாள் ஜெபம் செய்ய இரண்டு பேர்கள் ஆலயத்துக்குச் செல்கிறார்கள். ஒருவர் பரிசேயர், வேதவசனங்களைப் பற்றிய அறிவிற்கும் ஆலயத்தில் அவரது தலைமைக்கும் நன்கு அறியப்பட்டவர், மற்றவர் ஆயக்காரர், ஊழல் நிறைந்த ரோமானியா ஆக்கிரமிப்பாளர்களிடம் பணிபுரியும் சோரம் போனவராக வெறுக்கப்படுகிறார். பரிசேயர் எல்லோரையும் விட, எல்லா வழிகளையும் தான் பரிசுத்தமாக இருப்பதற்கு தனக்குத்தானே ஜெபிக்கிறார். இதற்காக அவர் தேவனுக்கு நன்றி செலுத்துகிறார். ஆனால் மற்றவர், ஆயக்காரர், அவர் ஜெபிக்கும்போது ஏறெடுத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவர் துக்கத்தில் மார்பில் அடித்துக்கொண்டு, "தேவனே, நான் ஒரு பாவி, என்னிடம் இரக்கமாயிரும்!" என்கிறார் தேவனுக்கு முன்பாக நியாயத் தீர்ப்பு அளிக்கப்படும் அந்த நாளில் வீட்டிற்குச் சென்றவர் ஆயக்காரர் மட்டுமே என்று கூறி இயேசு தனது கதையை முடிக்கிறார். இந்த ஆச்சரியமூட்டும் தலைகீழ் நிலைமை தனது ராஜ்யத்தில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர் விளக்குகிறார்: "தன்னை உயர்த்திக் கொள்ளும் ஒவ்வொருவரும் தாழ்த்தப்படுவார்கள், ஆனால் தன்னைத் தாழ்த்திக் கொள்வோர் உயர்த்தப்படுவார்கள்."
இயேசுவின் வாழ்க்கையின் மற்றொரு காட்சியுடன் இயேசுவின் வார்த்தைகளைப் பின்பற்றுவதன் மூலம் பணிவுக்கான இந்தக் கருத்தை லூக்கா வலியுறுத்துகிறார். லூக்கா சில சமயங்களில், தாய்களும் தகப்பன்களும் தங்கள் குழந்தைகளை இயேசுவின் ஆசீர்வாதத்திற்காக எப்படி அழைத்துச் செல்கிறார்கள் என்பதை விளக்குகிறார். சீடர்கள் இந்தக் குறுக்கீடுகளைப் பொருத்தமற்றதாக கருதுகின்றனர். அவர்கள் குடும்பங்களைத் தடுத்து அவர்களை அப்பால் அனுப்ப முயற்சிக்கிறார்கள். ஆனால், "சிறுபிள்ளைகள் என்னிடம் வரட்டும், அவர்களுக்கு தடை செய்யாதீர்கள், ஏனென்றால் தேவனுடைய ராஜ்யம் அவர்களைப் போன்ற அனைவருக்கும் சொந்தமானது" என்று இயேசு சிறு பிள்ளைகளுக்காக எழுந்து நிற்கிறார். இந்த எச்சரிக்கையுடனும் அழைப்பினுடனும் அவர் முடிக்கிறார், "ஒரு குழந்தையைப் போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அதில் பிரவேசிக்க மாட்டார்கள்."
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F24541%2F1280x720.jpg&w=3840&q=75)
லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப...
More
இந்தத் திட்டத்தை வழங்கிய பைபிள் ப்ராஜெக்ட்டுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். கூடுதல் தகவல்களுக்கு, இந்த இணையதளத்தை காண அழைக்கிறோம்: www.bibleproject.com
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F26874%2F320x180.jpg&w=640&q=75)
இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்
![யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F25110%2F320x180.jpg&w=640&q=75)
யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்
![கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F25512%2F320x180.jpg&w=640&q=75)
கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்
![தாவீதின் சங்கீதங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F24975%2F320x180.jpg&w=640&q=75)
தாவீதின் சங்கீதங்கள்
![நான் புறம்பே தள்ளுவதில்லை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F26850%2F320x180.jpg&w=640&q=75)
நான் புறம்பே தள்ளுவதில்லை
![தேவனுடைய சர்வாயுதவர்க்கம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F25281%2F320x180.jpg&w=640&q=75)
தேவனுடைய சர்வாயுதவர்க்கம்
![தேவனின் சர்வாயுத வர்க்கம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F47592%2F320x180.jpg&w=640&q=75)
தேவனின் சர்வாயுத வர்க்கம்
![பதின்ம வயது மற்றும் பெற்றோர் - சந்தோஷங்கள் மற்றும் சவால்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F48055%2F320x180.jpg&w=640&q=75)
பதின்ம வயது மற்றும் பெற்றோர் - சந்தோஷங்கள் மற்றும் சவால்கள்
![கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F47909%2F320x180.jpg&w=640&q=75)
கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!
![தூக்கமின்மை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F47730%2F320x180.jpg&w=640&q=75)