திட்ட விவரம்

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்மாதிரி

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

40 ல் 15 நாள்

லூக்காவின் இந்தப் பகுதியில், இயேசு எருசலேமுக்கான தனது நீண்ட பயணத்தின் முடிவை எட்டியுள்ளார். அவர் ஒலிவ மலையிலிருந்து கழுதை மீது நகரத்தை நோக்கி வருகிறார். அவர் செல்லும் வழியில், "கர்த்தருடையநாமத்தினாலே வரும் ராஜாவைத் துதியுங்கள்" என்று பாடும்போது பெரிய மக்கள் கூட்டம் அவரை ராஜ நுழைவாயிலுடன் வரவேற்கிறார்கள். இஸ்ரவேலின் பழைய தீர்க்கதரிசிகள் ஒருநாள் தேவன் தம் மக்களை மீட்டு உலகை ஆள வருவார் என்று வாக்குத்தத்தம் அளித்ததைக் கூட்டம் நினைவில் வைத்தது. நீதி மற்றும் சமாதானத்தைக் கொண்டு வருவதற்காக எருசலேமுக்குக் கழுதை மீது சவாரி செய்து வரவிருக்கும் ராஜாவைப் பற்றி சகரியா தீர்க்கதரிசி பேசினார். இந்த நம்பிக்கைகள் அனைத்தையும் இயேசு செயல்படுத்துகிறார் என்பதை அவர்கள் உணர்ந்ததால் கூட்டம் பாடுகிறது.

ஆனால் எல்லோரும் ஒப்புக்கொள்வதில்லை. மதத் தலைவர்கள் இயேசுவின் ஆட்சியை தங்கள் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதுகின்றனர், மேலும் அவரை ஆளும் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வழிகளை நாடுகிறார்கள். என்ன வரப்போகிறது என்பதை இயேசுவால் பார்க்க முடியும். இஸ்ரவேல் அவரை ராஜாவாக ஏற்றுக்கொள்ளாது என்பதையும், அவர்கள் மறுப்பது அவர்களை அழிவான பாதையில் இட்டுச்செல்லும் என்பதையும் அவர் அறிவார். அது அவரது இருதயத்தை உடைக்கிறது. மேலும் ... அது அவரைத் தூண்டுகிறது. அவர் எருசலேமுக்குள் நுழைந்தவுடன், அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, அங்கே முழு தியாக அமைப்பையும் சீர்குலைக்கும் பணமாற்று செய்பவர்களை புறம்பே துரத்துகிறார். அவர் முற்றத்தின் மையத்தில் நின்று அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார், "என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர்குகையாக்கினீர்கள்" என்றார். இஸ்ரவேலின் மத மற்றும் அரசியல் சக்தியின் மையமான இதே இடத்தில் நின்று இஸ்ரவேலின் பழைய தலைவர்கள் பற்றிய அதே விமர்சனத்தை முன்வைத்த எரேமியா தீர்க்கதரிசியை இங்கே அவர் மேற்கோள் காட்டுகிறார்.

மதத் தலைவர்கள் இயேசுவின் எதிர்ப்பின் கருத்தைப் பெறுகிறார்கள், ஆனால் அவர்கள் அதிலிருந்து கற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரவேலின் பழைய தலைவர்கள் எரேமியாவுக்கு எதிராக சதி செய்ததைப் போலவே, அவர்களும் இயேசுவை முடிவுக்குக் கொண்டுவருகிறார்கள். இஸ்ரவேலின் தலைவர்களின் நடத்தையை விவரிக்க, இயேசு ஒரு தோட்ட எஜமானைப் பற்றி ஒரு உவமையைக் கூறுகிறார், அவர் நெடுநாளாகப் புறத்தேசத்துக்குப் போயிருந்தால் தனது திராட்சைத் தோட்டத்தை குத்தகைக்கு விடுகிறார். கனிகளில் தன் பாகத்தைக் கொடுத்தனுப்பும்படி உரிமையாளர் தனது திராட்சைத் தோட்டத்திற்கு ஊழியக்காரனை அனுப்புகிறார், ஆனால் தோட்டக்காரன் ஊழியக்காரர்களை அடித்து எதுவும் கொடுக்காமல் அனுப்புகிறார்கள். எனவே உரிமையாளர் தனது சொந்த குமாரனைத் திராட்சைத் தோட்டத்திற்கு அனுப்புகிறார், அவனுக்கு அதிக மரியாதை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஆனால் தோட்டக்காரர்கள் அதன் வாரிசை அழிப்பதன் மூலம் திராட்சைத் தோட்டத்தை முழுவதுமாக கொள்ளையடிக்கும் வாய்ப்பாக பார்க்கிறார்கள். அவர்கள் உரிமையாளரின் அன்பு குமாரனைப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இந்தக் கதையில், திராட்சைத் தோட்டத்தின் மோசடியான தோட்டக்காரர்களை இஸ்ரவேலின் மதத் தலைவர்களுடன் இயேசு ஒப்பிடுகிறார், அவர்கள் தேவன் அனுப்பும் தீர்க்கதரிசிகள் அனைவரையும் வழக்கமாக நிராகரிக்கிறார்கள், இப்போது தேவனின் அன்பான குமாரனைக் கொல்லத் தயாராகி வருகிறார்கள். மதத் தலைவர்கள் தங்கள் பிதாக்களின் பாவங்களை மீண்டும் செய்கிறார்கள் என்பதையும், அவர்களின் கூடுதல் அதிகாரத்தைக் கொள்ளையடிக்கும் லட்சியங்கள் அவர்களின் சொந்த அழிவுக்கு வழிவகுக்கும் என்பதையும் இயேசு தெளிவுபடுத்துகிறார்.

நாள் 14நாள் 16

இந்த திட்டத்தைப் பற்றி

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப...

More

இந்தத் திட்டத்தை வழங்கிய பைபிள் ப்ராஜெக்ட்டுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். கூடுதல் தகவல்களுக்கு, இந்த இணையதளத்தை காண அழைக்கிறோம்: www.bibleproject.com

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்