மறுரூபமாக்க மறுரூபமாகுமாதிரி
![மறுரூபமாக்க மறுரூபமாகு](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F18414%2F1280x720.jpg&w=3840&q=75)
திருச்சபையில் நமது பங்கு
சகோதரரே, நீங்கள் எல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும்.... உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன் - 1 கொரிந்தியார் 1:10
தேவன் கொடுத்த அதிகாரத்துடன், திருச்சபையில்
இருந்த பிளவுகளை இணைக்கும் பாலமாக பவுல் செயல்படுகிறார் . அவர் எந்த கட்சியினரையும் சாராமல் தேவனுக்குச் சேவை செய்வதையே பிரதானப் படுத்துகிறார் . இன்றையத் திருச்சபைகளும் எண்ணற்ற கருத்து வேறுபாடுகளையும் , எண்ணங்களையும் கொண்டிருக்கிறது . மாற்று கருத்துக்கள் கவனத்துடன் , தகுந்த விளக்கத்துடன் களையப்பட வேண்டும் . இந்தவிதமான அபிப்பிராய பேதங்கள் , நாம் அனைவரும் கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்டால் எளிதில் தீர்வு காணலாம் . தங்கள் சிந்தனைகளிலும் கருத்துக்களிலும் மாறுபடுகிறவர்கள் , அந்த உயரிய நோக்கத்தை உடைத்து , இரண்டு குழுக்களாகப் பிரிந்து தவறான போதனைகளைப் பிரசங்கிக்கிறவர்களாகிறார்கள் . அவர்கள் விசுவாசத்தின் ஆரம்ப நிலைக்கே கொண்டுவரப்பட்டு , கிறிஸ்துவை மட்டுமே முளைக்கல்லாகக் கொண்டு புத்தம் புதிய ஆரம்பத்தைச் செய்யும்படி ஊக்குவிக்கப்படவேண்டும் . இந்த சிறப்பான தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளின் காலத்திலும் கிறிஸ்து மட்டுமே முக்கியப்படுத்தப் படவேண்டும் . இயேசு கிறிஸ்துவைப் பூரணமாக வெளிப்படுத்துவதே நமது அனுபவமாக இருந்து , மற்றவர்களும் தங்களைக் கிறிஸ்துவில் மட்டுமே முக்கியப்படுத்த ஈர்க்கப்படவேண்டும். எனவே நாம் , சடங்காச்சாரங்களுக்கும் , பழமையான பழக்க வழக்கங்களுக்கும் இடம் கொடாமல் , கிறிஸ்துவை மட்டுமே மகிமைப் படுத்தும் அதிகாரத்துடன் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும் .
நாம் நமது பகுதியைச் செவ்வனே செய்யும் பொழுது தேவன் அவருடைய வல்லமையை விளங்கச்செய்வார் .
"...பவுல் உங்களுக்காகச் சிலுவையில் அறையப்படவில்லை ."
நாம் இன்னும் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காகச் சிலுவையில் மரித்தார் என்பதே முக்கியமானது . வேறு தேவதூதரோ , நியாயப் பிரமாணத்தைப் போதிக்கிற ஆசாரியர்களோ மரிக்கவில்லை. அணைத்து செயல்களிலும் கிறிஸ்து ஒருவரை மட்டுமே மகிமைப் படுத்துவோம் . மற்றவரை அல்ல. பார்க்கக்கூடிய செயல்களை நம்பி , அற்புதங்களை எதிர்பார்த்து தர்க்கங்களை எழுப்புகின்றனர். அவர்களை கிறிஸ்து மரித்த சிலுவைக்கு நேராக நடத்துவது அவசியம். அதுதான் தேவனுடைய வல்லமையையும் , அன்பையும் விளக்குகின்ற அற்புதம் .
ஆகையால் தேவனால் அழைக்கப்பட்டவர்கள் என்று கருதுகிற நாம் ஒரு எளிமையான நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளவேண்டும். அது என்னவென்றால் நாம் அறிவுள்ளவனாகவோ அல்லது பலசாலியாகவோ இருந்ததினால் தேவன் அழைக்கவில்லை .
ஆனால் நமது அறிவீனத்திலும் ஞானிகளை வெட்கப்படுத்துவதற்குமே நம்மை தேவன் தெரிந்து கொண்டார் .
இழிவான உலகக் காரியங்கள் நமது இருதயத்தை நெருக்கியிருந்தாலும், தேவனுடைய உன்னதமான அழைப்புக்குத் தகுதியுள்ளவர்களாகும்படி , நம்முடைய வாழ்க்கையைக் தேவன் பொறுப்பெடுத்துக்கொண்டு அவருடைய மகிமைக்காக நம்மைப் பயன்படுத்த அனுமதிப்போம் .
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![மறுரூபமாக்க மறுரூபமாகு](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F18414%2F1280x720.jpg&w=3840&q=75)
தேவன் நம்மை அழைத்ததின் நோக்கத்தை அறிந்து அனுபவிப்பது, சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்வது, பிறருக்கு அவருடைய இரட்சிப்பின் கிரியையை அறிவிப்பது, எதிர் கால நம்பிக்கையுடன் நிகழ்காலங்களைக் கடத்தல், தேவன் தெரிந்து கொண்ட தகுதியுள்ள பாத்திரமாக வாழ்வது, திருச்சபைகளில் ஐக்கியத்தை வளர்ப்பது, கிறிஸ்துவை மட்டுமே தலைவராகக் கொள்வது, தேவனுடைய வார்த்தையைப் போதித்து பிரகடனப்படுத்துவதாகும்.
More
ഈ പദ്ധതി നൽകിയതിന് സി ജെബരാജിന് നന്ദി പറയാൻ ഞങ്ങൾ ആഗ്രഹിക്കുന്നു. കൂടുതൽ വിവരങ്ങൾക്ക്, സന്ദർശിക്കുക: http://jebaraj1.blogspot.com/ |
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![நம்பிக்கையின் குரல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F19667%2F320x180.jpg&w=640&q=75)
நம்பிக்கையின் குரல்
![உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F20517%2F320x180.jpg&w=640&q=75)
உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்
![கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F22146%2F320x180.jpg&w=640&q=75)
கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்
![உண்மைக் கர்த்தர்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F24467%2F320x180.jpg&w=640&q=75)
உண்மைக் கர்த்தர்
![சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சி](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F22005%2F320x180.jpg&w=640&q=75)
சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சி
![BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F24541%2F320x180.jpg&w=640&q=75)
BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்
![உண்மை ஆன்மீகம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F24465%2F320x180.jpg&w=640&q=75)
உண்மை ஆன்மீகம்
![நான் புறம்பே தள்ளுவதில்லை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F26850%2F320x180.jpg&w=640&q=75)
நான் புறம்பே தள்ளுவதில்லை
![தேவன் நம்முடன் - அட்வெந்து கால வேதபாடத் திட்டம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F23038%2F320x180.jpg&w=640&q=75)
தேவன் நம்முடன் - அட்வெந்து கால வேதபாடத் திட்டம்
![இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F26874%2F320x180.jpg&w=640&q=75)