மாட்டுத்தொழுவத்திற்கான பயணம்மாதிரி

விசுவாசத்திலே நடவுங்கள்
பல விசுவாச ஆண்களும் பெண்களும் தங்கள் நம்பிக்கை கடுமையாக சோதிக்கப்படும் வரை அவர்களின் நம்பிக்கையின் பலனைக் காணவில்லை என்பதை வேதம் நமக்கு நினைவூட்டுகிறது. சில சந்தர்ப்பங்களில், அவர்கள் தங்கள் ஜெபங்களில் சிலவற்றிற்கு உறுதியான பதில்களை தங்கள் வாழ்நாளில் பார்த்ததில்லை. ஆனாலும் இது நாளுக்கு நாள் தேவனை நம்புவதைத் தடுக்கவில்லை.
நான்கு நூற்றாண்டுகளாக இஸ்ரேலில் ஒரு எழுதும் தீர்க்கதரிசி இல்லை, ஆனால் சிமியோன் மற்றும் அன்னாள் போன்ற ஆண்களும் பெண்களும்-உண்மையான மேசியாவிற்காக எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெய்வீக மக்கள்-தேவன் தான் சொன்னதைச் சரியாகச் செய்வார் என்ற நம்பிக்கையை இன்னும் வைத்திருக்கிறார்கள். அவர்கள் வயதான காலத்தில் கூட நம்பிக்கையை விட்டுவிடவில்லை. வேறு யாரும் செய்யாவிட்டாலும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒருவரை அவருடைய தாயின் கரங்களில் பார்த்தவுடன் அவர்கள் உடனடியாக அடையாளம் கண்டதில் ஆச்சரியமில்லை.
இந்த இளம் குடும்பம் தேவாலயத்திற்கு மிகக் குறைந்த காணிக்கையை கொண்டு வந்து ஏழ்மையானவர்கள் என உணர்த்துவது முக்கியமல்ல, சிமியோனும் அன்னாளும் குழந்தையான இயேசுவை கண்ட உடனே அவரை அறிந்து கொண்டனர், ஏனென்றால் அவர்கள் தேவனோடு தொடர்ந்து ஒருமனபாட்டில் இருந்தார்கள், காண்பதை விட விசுவாசத்தினால் நடந்தார்கள்.
செயல்பாடு: தேவைப்படும் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை விநியோகிக்கும் நம்பகமான தொண்டு நிறுவனத்திற்கு புதிய பொம்மையை நன்கொடையாக வழங்குங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

2,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமைதியான இரவில், தேவதூதர்கள் தங்கள் மந்தைகளை மேய்க்கும் மேய்ப்பர்கள் கூட்டத்திற்கு இரட்சகரின் பிறப்பு செய்தியைக் கொண்டு வந்தனர். செய்தியைக் கேட்டபின், அந்த மேய்ப்பர்கள் பெத்லகேமில் ஒரு மாட்டுக்கொட்டையில் ஒரு குழந்தையைத் தேடுவதற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டார்கள். இத்தனை வருடங்கள் கழித்தும், அந்த அழைப்பு மாறவில்லை. டாக்டர் சார்லஸ் ஸ்டான்லியுடன் இணையுங்கள், அவர் இரட்சகரை நெருங்க உங்களுக்கு உதவுவதோடு, இந்த காலத்தில் தகப்பனின் அன்பில் ஓய்வெடுக்க நேரம் ஒதுக்க ஊக்குவிக்கிறார்
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சிலுவையும் கிரீடமும்

வருகை: கிறிஸ்துமஸ் பயணம்

நோயல்: அனைவருக்கும் கிறிஸ்துமஸ்

இயேசு: நம் ஜெயக்கொடி

ஏன் ஈஸ்டர்?

தேவனின் இருதயத்தை தினமும் தேடுதல் - ஞானம்

சமாதானத்தை கண்டுக்கொள்வோம்

தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்

இளைப்பாறுதலைக் காணுதல்
