தேவனுடைய வாக்குத்தத்தங்களைக் கண்டடையுங்கள்!மாதிரி

தேவனுடைய வாக்குத்தத்தங்களைக் கண்டடையுங்கள்!

3 ல் 2 நாள்

தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவர்

நீங்கள் யாரை நம்ப ஆயத்தமாக இருக்கிறீர்கள்? உதாரணமாக, ஒரு நாள்முழுவதும் உங்கள் குழந்தையை கவனித்துக்கொள்ள யாராவது ஒருவர் உங்களுக்குத் தேவைப்படுவார்களானால், அவர்களைத் தேர்ந்தெடுக்க அல்லது, அவர்களுக்கான தகுதி என்று எதை நீங்கள் முன்வைப்பீர்கள்?

ஒருவரை நம்புவதற்கு, அந்த நபர் நேர்மையானவரா என்பதை நீங்கள் குறிப்பாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்...சரிதானே? சொன்ன வாக்கை காப்பாற்றுகிற யாராவது இருக்கிறார்களா? அவர்கள் பேசும் வார்த்தையைப் போலவே நல்லவர்கள் யாரேனும் உண்டா? உதவியற்ற நிலையில் யார் உங்களை விட்டுவிலகாதிருப்பார்கள்? யோசித்துப்பாருங்கள்.

தேவன் முற்றிலும் உண்மையுள்ளவராயிருக்கிறார்... வேதாகமத்தில் எல்லா இடங்களிலும், அவர் தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதை நாம் காணலாம்! இந்த வல்லமைமிக்க உண்மைகளை நாம் அலசி ஆராய்வோம்:

ஏசாயா 55:11: “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்”.

எரேமியா 1:12: “அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார்” .

யோசுவா 21:45: “கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று”

பார்த்தீர்களா? தேவன் என்ன சொன்னாலும், அவருடைய வார்த்தை பொன்னைப் போல சிறந்தது என்பதையும், அவர் சொன்னதைச் செய்யவல்லவர் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் அவருடைய வார்த்தையை தாராளமாக சார்ந்துகொள்ளலாம். அது நிறைவேறியிருக்கிறது, அதுமீண்டும் நிறைவேறும்!

நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம்: “தேவனே, உமது வார்த்தைக்கு நன்றி; அதுவெறுமனே உம்மிடத்திற்குத் திரும்பாமல், நீர் விரும்புகிறதை செய்து, நீர் அனுப்பிய காரியம்வாய்க்கும்படி செய்யும்! உமது வாக்குத்தத்தங்களை நான் விசுவாசிக்கிறேன். உம்முடைய உண்மையை நான் நம்புகிறேன். நீர் சொல்லியிருக்கிற எல்லவற்றையும் நிறைவேற்றுவீர்! இயேசுவின் நாமத்தில், ஆமென்”.

நீங்கள் இருப்பதற்கு நன்றி!

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

தேவனுடைய வாக்குத்தத்தங்களைக் கண்டடையுங்கள்!

தேவன் ஏன் வாக்குத்தத்தங்களை அளிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மனிதர்களுக்கு உறுதியளிப்பது மிகவும் அவசியம் என்பதை தேவன் அறிந்திருந்தார்: அதாவது, மனிதர்கள் எல்லா நேரத்திலும் ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கலாம் என்பதை வெளிப்படுத்துவதற்காகவே வாக்குத்தத்தங்களை அளிக்கிறார். எனவே, அவருடைய வாக்குத்தத்தங்களுக்குள் பிரவேசிக்கவும், அவற்றை முழுமையாக சுதந்தரித்துக்கொள்ளவும் நாம் என்ன செய்ய வேண்டும்? வாருங்கள் காண்போம்!

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=ReadingPlan&utm_content=discovergodspromises