சங்கீதம் 150

150
சங்கீதம் 150
1அல்லேலூயா,
இறைவனை அவருடைய பரிசுத்த இடத்தில் துதியுங்கள்;
அவருடைய வல்லமை வெளிப்படும் வானங்களில் அவரைத் துதியுங்கள்.
2அவருடைய வல்லமையின் செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்;
இணையற்ற அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
3எக்காள சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்;
யாழோடும், வீணையோடும் அவரைத் துதியுங்கள்.
4தம்புராவுடன் நடனமாடி அவரைத் துதியுங்கள்;
கம்பியிசைக் கருவிகளினாலும், புல்லாங்குழலினாலும் அவரைத் துதியுங்கள்.
5கைத்தாளங்களின் ஓசையுடன் அவரைத் துதியுங்கள்;
அதிர்ந்து ஒலிக்கும் கைத்தாளங்களுடன் அவரைத் துதியுங்கள்.
6சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக.
அல்லேலூயா.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங்கீதம் 150: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்