யோபு 25
25
அத்தியாயம் 25
பில்தாதின் வார்த்தைகள்
1அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:
2“அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது;
அவர் தமது உன்னதமான இடங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.
3அவருடைய படைகளுக்குத் தொகையுண்டோ?
அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?
4இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி?
பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
5சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசிக்காமலிருக்கிறது;
நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
6புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுமக்களும் எம்மாத்திரம்” என்றான்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
யோபு 25: IRVTam
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.