“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!Sample
“அவர் இரட்சிப்பை ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உண்மை அனுபவமாக்குகிறார்”
நமது இரட்சிப்புக்கான கிரயத்தை இயேசு செலுத்தியிருக்க, பரிசுத்த ஆவியானவர் மூலமாக நம்மோடிருக்கும் தேவ பிரசன்னம் இரட்சிப்பைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அதனை தனிப்பட்ட வாழ்க்கை அனுபவமாக மாற்றியுள்ளார். நாம் பிறக்கும்போதே இரட்சிப்புடன் பிறக்கவில்லை என இயேசு தெளிவாகச் சொன்னார். பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே சாத்தியமாகும் ஆவிக்குரிய மறுபிறப்பு ஒன்று உண்டென்று அவர் சொன்னார்.
இயேசு பிரதியுத்தரமாக: “ஒருவன் ஜலத்தினாலும் (இயற்கையான பிறப்பு) ஆவியினாலும் (ஆவிக்குரிய புதுப்பித்தல்) பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்” என்று கூறினார் – யோவான் 3:5-6
ஒருவர் கிறிஸ்துவை தனது வாழ்வில் ஏற்றுக்கொண்டவுடனே, அவரது உள்ளான மனுஷனில் ஒரு ஆவிக்குரிய மலர்ச்சி நிகழ்ந்து அவரது வாழ்விலிருந்து பாவத்தின் தண்டனையை முற்றிலும் அகற்றுகிறது.
மேலும், விசுவாசியல்லாதோர் வாழ்க்கையிலும் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்து தேவனுடைய அற்புதமான அன்பை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். இயேசு சொன்னார்:
“பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக் குறித்துச் சாட்சிகொடுப்பார்” – யோவான் 15:26
இன்றைக்கு, பரிசுத்த ஆவியானவர் தேவ அன்பின் ரூபமாகிய இயேசுவையும், நம் உலகின் விசுவாசிகளுக்கும், விசுவாசியல்லாதோருக்கும் தேவனைப்பற்றி இயேசு என்னவெல்லாம் தெரியப்படுத்தினாரோ அவற்றையும் அறிக்கை செய்து, தேவனது அன்பை அறிவிக்கும் அற்புதமான ஊழியத்தைத் தொடர்ந்து ஆற்றி வருகிறார்;
Scripture
About this Plan
நீங்கள் தனித்திருக்கவில்லை. வாழ்க்கை எத்தனை சவால்களை நம்மீது எறிந்தாலும், நீங்கள் ஒரு நாள் விசுவாசியோ அல்லது முப்பது நாள் விசுவாசியோ யாராயிருந்தாலும் இந்த உண்மை எல்லோருக்கும் பொருந்தும். இந்த வாசிப்புத் திட்டத்தில் தேவனுடைய உதவியை எப்படிப்பற்றிக்கொள்வது என்று கற்றுக்கொள்ளுங்கள். இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
More