YouVersion Logo
Search Icon

சங்கீதம் 53

53
சங்கீதம் 53
மகலாத் என்னும் பாணியில் வாசிக்கப்படும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம்.
1மூடன் தன் இருதயத்தில், “இறைவன் இல்லை” என்று சொல்கிறான்.
அவர்கள் சீர்கெட்டவர்கள்;
அவர்களுடைய வழிகள் இழிவானவை;
அவர்களில் நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.
2இறைவன் பரலோகத்திலிருந்து
மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார்,
அவர்களில் விவேகமுள்ளவனாவது
இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார்.
3எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்;
நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை,
ஒருவனாகிலும் இல்லை.
4தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ?
மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்;
அவர்கள் இறைவனை வழிபடுவதுமில்லை.
5பயப்படுவதற்கு எதுவுமில்லாத இடத்திலே,
அவர்கள் பயத்தில் நடுங்குகிறார்கள்.
உன்னைத் தாக்கியவர்களின் எலும்புகளை இறைவன் சிதறடித்தார்;
இறைவன் அவர்களைப் புறக்கணித்தபடியால், நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.
6சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக!
இறைவன் தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது,
யாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்!

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in