YouVersion Logo
Search Icon

சங்கீதம் 101

101
சங்கீதம் 101
தாவீதின் சங்கீதம்.
1யெகோவாவே, நான் உமது அன்பையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்;
உமக்கே நான் துதி பாடுவேன்.
2நான் குற்றமற்ற வாழ்க்கையை வாழ கவனமாயிருப்பேன்;
நீர் எப்பொழுது என்னிடத்தில் வருவீர்?
நான் குற்றமற்ற இருதயத்துடன்
என் வீட்டின் விவகாரங்களை நடத்துவேன்.
3தீங்கான செயல்களை
நான் என் கண்முன் வைக்கமாட்டேன்.
உண்மையற்ற மனிதரின் செயல்களை நான் வெறுக்கிறேன்;
அவைகள் என்னைப் பற்றிக்கொள்ளாது.
4வஞ்சக இருதயமுடைய மனிதரை என்னைவிட்டுத் தூரமாய் விலக்கிவைப்பேன்;
நான் தீமையோடு எவ்வித தொடர்பும் வைக்கமாட்டேன்.
5தன் அயலாரை இரகசியமாய் அவதூறு செய்கிற மனிதரை
நான் தண்டிப்பேன்;
கர்வமான கண்களையும் பெருமையான இருதயத்தையும் கொண்ட மனிதரை
நான் சகிக்கமாட்டேன்.
6நாட்டில் உண்மையுள்ளவர்களாய் இருப்போர்மீது என் கண்கள் இருக்கும்,
அவர்கள் என்னோடு வாழ்வார்கள்;
குற்றமற்றவனாய் நடப்பவர்களே
எனக்கு ஊழியம் செய்வார்கள்.
7வஞ்சனை செய்யும் யாரும்
என் வீட்டில் வாழமாட்டார்கள்;
பொய்ப் பேசுபவர் யாரும்
என் சமுகத்தில் நிற்கவுமாட்டார்கள்.
8நான் நாட்டிலுள்ள கொடியவர்கள் எல்லோரையும்
காலைதோறும் தண்டிப்பேன்;
தீங்குசெய்யும் ஒவ்வொருவரையும்
யெகோவாவினுடைய நகரத்திலிருந்து அகற்றிவிடுவேன்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy