சங்கீதம் 100
100
சங்கீதம் 100
நன்றியுணர்வை வெளிப்படுத்தும் சங்கீதம்.
1பூமியிலுள்ளவர்களே, எல்லோரும் மகிழ்ச்சியுடன் யெகோவாவை ஆர்ப்பரியுங்கள்.
2மகிழ்ச்சியுடன் யெகோவாவை வழிபடுங்கள்,
மகிழ்ச்சிப் பாடல்களோடு அவர்முன் வாருங்கள்.
3யெகோவாவே இறைவன் என்று அறியுங்கள்.
அவரே நம்மை உண்டாக்கினார், நாம் அவருடையவர்கள்;
நாம் அவருடைய மக்கள், அவருடைய மேய்ச்சலின் ஆடுகள்.
4அவருடைய வாசல்களில் நன்றியோடும்,
அவருடைய ஆலய முற்றங்களில் துதியோடும், உட்செல்லுங்கள்
அவருக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரைத் துதியுங்கள்.
5யெகோவா நல்லவர், அவருடைய அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது;
அவருடைய உண்மை எல்லாத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வருகிறது.
Currently Selected:
சங்கீதம் 100: TCV
Highlight
Share
Copy
![None](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2F58%2Fhttps%3A%2F%2Fweb-assets.youversion.com%2Fapp-icons%2Fen.png&w=128&q=75)
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.