YouVersion Logo
Search Icon

மீகா முன்னுரை

முன்னுரை
மீகா கி.மு. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு இறைவாக்கினன். ஏசாயாவின் காலத்திலேயே இவனும் வாழ்ந்தான். பிரிக்கப்பட்ட இரண்டு அரசுகளான யூதாவுக்கும் இஸ்ரயேலுக்கும் எதிராக மீகா இறைவாக்குரைத்தான்.
இக்காலத்தில் இரண்டு அரசுகளிலும் செழிப்பும் சமாதானமும் நிலவியது. ஆனால் அங்கு ஏழைகளை ஒடுக்குதல், நீதிகேடு, போலியான பக்தி போன்றவை காணப்பட்டன. மீகா தலைநகரங்களான சமாரியா, எருசலேம் ஆகியவற்றுக்கும் அதன் தலைவர்களுக்கும் எதிராக இறைவாக்குரைத்தான். இறைவனின் நீதியும், மக்களிடையே காணப்படவேண்டிய நீதியைக் குறித்த இறைவனின் வாஞ்சையுமே இப்புத்தகத்தின் முக்கிய கருப்பொருளாக உள்ளது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in