YouVersion Logo
Search Icon

எபேசியர் முன்னுரை

முன்னுரை
இக்கடிதம் கி.பி. 60 ஆம் ஆண்டிலிருந்து 61 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் எபேசு பட்டணத்திலுள்ள திருச்சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுலினால் எழுதப்பட்டது. அவர் ரோம் நகரத்தில் சிறையில் இருந்த காலத்தில் அங்கிருந்தே இக்கடிதத்தை எழுதினார். ஆசியா மாகாணத்திலுள்ள விசுவாசிகளை ஆறுதல்படுத்தவும், உற்சாகப்படுத்தவுமே அவர் இதை எழுதினார். நாம் தீய சக்திகளோடு போராடுவதால் நமக்கு ஒரு பெரிய போராட்டம் தற்காலத்தில் இருக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். இறைவனுடைய நித்தியமான திட்டம், கிறிஸ்துவின் மூலமாகவும் அவருடைய உடலாகிய திருச்சபையின் மூலமாகவும் நிறைவேற்றப்படுகிறது என்பதே இதில் கூறப்படும் முக்கிய விஷயமாகும்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in