YouVersion Logo
Search Icon

கொலோசேயர் முன்னுரை

முன்னுரை
இக்கடிதம் கி.பி. 60 ஆம் ஆண்டிலிருந்து 61 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் கொலோசே பட்டணத்திலுள்ள திருச்சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுலினால் எழுதப்பட்டது. அவர் ரோம் நகரத்தில் சிறையில் இருந்த காலத்தில் அங்கிருந்தே இதை எழுதினார். அவர் கொலோசே பட்டணத்திற்கு ஒருபோதும் சென்றதில்லை. அவர் தமது இரண்டாவது ஊழியப் பயணத்தின்போது, எபேசு பட்டணத்தில் இருந்த காலத்தில், கொலோசே பட்டணத்து விசுவாசிகளைக் குறித்து அறிய நேரிட்டது. அந்தத் திருச்சபைக்குள் யூதரல்லாதவர்களின் சில விசித்திரமான தத்துவங்கள் நுழைந்துகொண்டன. இந்த தவறான நம்பிக்கையைத் திருத்துவதற்காகவும், கிறிஸ்து வேறு யாருமல்ல, அவர் இறைவனே என்று காண்பிப்பதற்காகவுமே அவர் இதை எழுதினார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in