YouVersion Logo
Search Icon

3 யோவான் முன்னுரை

முன்னுரை
இக்கடிதம் கி.பி. 85 ஆம் ஆண்டிலிருந்து 96 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் அப்போஸ்தலனாகிய யோவானால் எழுதப்பட்டது. அவர் இதை எபேசுவிலிருந்து எழுதியிருக்கலாம் என நம்பப்படுகிறது. உண்மையைப் பிரசங்கிக்கிற நற்செய்திப் பணியாளர்கள் வரும்போது அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்ற நோக்குடன், தமது நண்பனாகிய காயுவுக்குக் இக்கடிதத்தை எழுதினார். அவ்விதமாய் உதவிசெய்ய மறுக்கும் தியோத்திரேப்பு போன்ற மனிதரைக் குறித்து அவர் எச்சரிக்கை செய்கிறார். கிறிஸ்துவின் பணியில் விசுவாசிகள் ஒருவருக்கொருவர் ஆதரவு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in