சரியில்லைமாதிரி

உலகின் பெரும்பாலான சீட்டாடங்களில் பொதுவாக ஒன்று உள்ளது: நீங்கள் மற்றவர்களின் சீட்டுகளை பார்க்கக் கூடாது! இது ஏமாற்றுதல் என அழைக்கிறார்கள், மேலும் அதைச் செய்ய வேண்டாம் என்று சொல்ல கூட தேவையில்லை.
ஆனால் உண்மையைச் சொல்கிறோம் எனில்... சில சமயங்களில் ஏமாற்றாமல் இருப்பது கடினம். சமையலறையில் இருந்து சிற்றுண்டிகளை எடுக்க சீட்டுகளை மேசையில் கீழ் நோக்கி வைத்து விட்டு சென்றால், அவர்கள் இல்லாத போது ஒரு பார்வை பார்ப்பது மிக எளிது என்பது உங்களுக்கு தெரியும். அது பெரிய விஷயம் அல்ல, சரியதானே? நீங்கள் பிடிபட்டால் மட்டுமே அது ஏமாற்றுதல் என்றாகும்!
சில நேரங்களில் வாழ்க்கையிலும் அதே விதமாக இருக்கும். யாரும் பார்க்காதபோது நாம் சரியானதை செய்கிறோமோ இல்லையோ என்பதற்கு என்ன முக்கியத்துவம் உள்ளது? பைபிளின் படி, நம்மை எப்போதும் பொறப்பாய் இருக்கும் படிக்கு வைக்க ஒருவர் இருக்கிறார்.
நீங்கள் சரியானதை அல்லது தவறானதைச் செய்கறீர்களா அதுவம் யாரும் பார்க்காதபோது என்பது முக்கியம் வாய்ந்தது என இயேசு கூறுகிறார். அவர் தனது சீடர்களிடம், மறைவாக நல்ல காரியங்களைச் செய்பவர்களை கடவுள் பாராட்டுவார் என்பதை நினைவில் கொள்ளுமாறு ஊக்கமளித்தார்.
இத பாருங்க, சில நேரங்களில் மக்கள் நல்ல காரியங்களை செய்வது அவர்களைப் பார்த்து அனைவரும் அவர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பதை அறிய வேண்டும் என்பதற்காக மட்டும் தான். அவர்கள் உண்மையில் நல்லது கெட்டது குறித்து கவலைப்படுவதில்லை. மக்கள் தங்களை நல்லவர்கள் என்று நினைக்க விரும்புகிறார்கள் அவ்வளவே. யாரும் நம்மை பார்க்காதபோது நல்ல காரியங்களைச் செய்வது நமக்கு மிகவும் நல்லது என்று இயேசு கூறுகிறார். அதற்காக நாங்கள் பாராட்டப்படமாட்டோம். எந்த விருதுகளையோ அல்லது சிறப்பு கவனத்தையோ பெறமாட்டோம். ஆனால் கடவுள் நீங்கள் மறைவாகச் செய்யும் காரியங்களைப் பார்க்கிறார், மேலும் அவற்றை மறப்பதில்லை. அது மதிப்புக்குரியது.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நாம் அனைவரும் சந்திக்கும் நான்கு முக்கியமான மன அழுத்தங்களைப் பற்றி பார்ப்போம் மற்றும் அவை ஒவ்வொன்றுக்கும் தேவரின் வார்த்தைகள் எவ்வாறு நமக்கு ஆறுதல், வழிகாட்டுதல் மற்றும் உதவியை வழங்குகின்றன என்பதையும் காண்போம். நீங்கள் சரியில்லாதபோது இயேசு உங்களுக்கு என்ன வழங்குகிறார், மக்கள் உங்களை நிராகரிக்கும்போது கடவுள் உங்களுக்கு தெரிய வேண்டியது என்ன, சரியானதைச் செய்வது எளிதல்லாதபோது என்ன செய்ய வேண்டும், மற்றும் நாம் கவலைப்படும்போது கடவுள் என்ன கூறுகிறார் என்பதைக் காண்போம்.
More