கனல் எரி: துணிச்சல்மிகு பிரார்த்தனைக்கு ஓர் எளிய வழிகாட்டுதல்மாதிரி

Ignited: A Simple Guide for Bold Prayer

6 ல் 3 நாள்

ஜெபம் நமது நம்பிக்கைக்கு எரிபொருளாகிறது

உலகில் உள்ள பெரிய தேவைகளையும் வாய்ப்புகளையும் நாம் பார்க்கும்போது, அவற்றிலிருந்து மறைந்திருக்கவோ அல்லது அவற்றை தீர்க்க சலசலப்புடன் முயல்வோம் என்று நினைக்கலாம். ஆனால், கடவுளுக்கு கீழ்ப்படிந்து விசுவாசத்துடன் செயல்பட விரும்புகிறோம். "அறுவடை மிகுந்துள்ளது, வேலையாட்கள் குறைவு" என்ற சவால் நிலைமையில், நாம் முதலில் செய்யவேண்டிய விஷயம் என்ன என்று இயேசு கூறியுள்ளார்: ஜெபம். நாம் துணிவுடன் மற்றும் உறுதியாக அறுவடையின் ஆண்டவரிடம் பிரார்த்தித்து, அவர் வாக்குறுதியளித்தபடி செய்யுமாறு கேட்கிறோம்: வேலையாளர்களை அனுப்பவும், நம்மை உந்தவும். us.

ஜெபம் நம் வாழ்வில் அவரது வல்லமை, வருகை மற்றும் நேரடி பங்களிப்பை வெளிப்படுத்துகிறது.

மத்தேயு 6:9-ல் காண்பதுபோல், “எங்கள் பிதாவே” என்ற வார்த்தையை கூறலாம் என்பது வியப்பானதே.கடவுள் எல்லா விதத்திலும் பரிசுத்தரும் அதிசயமுமாவார், அதே சமயம் அவர் நம் பிதாவாகவும் உள்ளார், அவர் நம்மிடம் பேசுமாறு மட்டுமல்லாமல், அருளின் சிங்காசனத்தைநோக்கி நெருங்கிவரவும் அழைக்கிறார் (எபிரேயர் 4:16). கடவுள் நம்மை நித்திய அன்பால் நேசிக்கிறார் - அந்த அளவுக்கு அவர் தன் குமாரனை நமக்காக அளித்தார் (யோவான் 3:16).

இயேசுவின் நாமத்தில் நாம் கடவுளிடம் ஜெபிக்கும் போது, அது சாதாரண அல்லது அக்கறையற்ற பிரபஞ்ச சக்தியிடம் ஜெபிப்பது அல்ல. அவர் உங்கள் தலையில் உள்ள முடிகளின் எண்ணிக்கையை அறிவார். முதல் சுவாத்தை நீங்கள் எடுப்பதற்கு முன்னமே அவர் உங்கள் பிராத்தியை அறிந்தவர். அவர் உங்களைத் தேர்ந்தெடுத்தார், உங்களைப் அங்கீகறித்தார். அந்த அளவுக்கு உங்களை அவர் நேசிக்கின்றார், அதனால் தான் நீங்கள் பிரார்த்திக்கையில் மிகவும் உற்று கேட்கிறார்!

பெரிய இராஜ்யத்திற்கான அறுவடைக்காக நாம் பிரார்த்திக்க இணங்கும்போது, உலகின் தேவைகளையும் நம் சொந்த தேவைகளையும் குறிப்பிட்டுப் பேசும்போது, கடவுள் நம் விசுவாசத்தைவும் பலப்படுத்துகிறார். நாம் பிரார்த்திக்கும்போது அவரது ஆவியானவர் நம்மில், நம் மூலம் மற்றும் நம்மை நோக்கியும் செயல்பட்டு, அவரிடம் கீழ்ப்படிந்த பிரார்த்தனையாளர்கள் மட்டுமல்ல, நாம் அவரது அன்பு பங்காளிகளும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார்.

ஜெபம்:

பிதாவே, நீர் என்னை நேசிக்கிறீர் என்பதற்காகவும், நான் பிரார்த்திக்கும்போது கேட்பதற்காகவும் நன்றி. முழுமையான வல்லமை, நேரம் மற்றும் நன்மையோடு நீர் பதிலளிக்கிறீர் என்பதற்காக நன்றி. என் குடும்பத்திலும் சமுதாயத்திலும் உம்மை அறியாதவர்களிடம் சிலரை அனுப்புமாறு உம்மிடம் கேட்டுக்கொள்கிறேன். எங்கே பிரசங்கிக்க அல்லது பேச நீர் என்னை அழைக்கிறீரோ அங்கு அறிவுரையும் துணிச்சலும் நல்கும்படி பிரார்த்திக்கிறேன். ஆமென்.

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Ignited: A Simple Guide for Bold Prayer

பரலோக பிதாவுடன் உறவு கொள்வதற்கான அற்புதமான வாய்ப்பாக ஜெபம் அமைகிறது. இந்த 6 நாள் திட்டத்தில், ஜெபம் பற்றி இயேசு நமக்கு என்ன கற்றுத் தந்தார் என்பதை நாம் கண்டறிவோம் மேலும் நம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் தொடர்ந்து ஜெபம் செய்ய ஊக்குவிக்கப்படுவோம்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Christine Caine - A21, Propel, CCMக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.propelwomen.org