திட்ட விவரம்

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்மாதிரி

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

40 ல் 36 நாள்

பவுல் தொடர்ந்து எருசலேமுக்குச் செல்லும்போது, இயேசுவின் விசுவாசிகளின் வளர்ந்து வரும் சமூகத்தைப் பார்வையிட வழியில் நிற்கிறான். அவர்கள் அனைவரும் தலைநகருக்குள் நுழைவதற்கான அவனது நோக்கத்தைப் பற்றி அறிந்துகொண்டு அதற்கு எதிராக வாதிடுவதில் விரைவாக இருக்கிறார்கள். அவன் போக வேண்டாம் என்று அவர்கள் கெஞ்சுகிறார்கள், அவன் அவ்வாறு செய்தால், சிறையில் அடைக்கப்படுவான் அல்லது கொல்லப்படுவான் என்று நம்புகிறார்கள். ஆனால் பவுல் தான் நம்புபவைகளுக்காக இறப்பதற்குத் தயாராக இருக்கிறான், எனவே அவன் தொடர்ந்து முன்னேறுகிறான். அவன் யூதருக்கு எதிரானவன் அல்ல என்பதை மற்றவர்களுக்குக் காட்டுவதற்காக அவன் எருசலேமுக்கு வரும்போது, யூத மரபுகளைப் பின்பற்றுகிறான். உண்மையில், அவன் தனது பிதாக்களின் தேவனை நேசிக்கும் ஒரு சக யூதருக்காக தனது உயிரைக் கொடுப்பான். ஆனால் யூதர்கள் அல்லாதவர்களுடனான பவுலின் தகாத தொடர்பை மட்டுமே யூதர்கள் பார்க்கிறார்கள். அவர்கள் பவுலின் பிரசங்கத்தை நிராகரித்து, அவரை ஆலயத்திலிருந்து வெளியேற்றி, அவரை அடித்து கொல்லத் தொடங்குகிறார்கள்.

எருசலேமில் விஷயங்கள் கைவிட்டு போய் கொண்டிருக்கின்றன என்ற வார்த்தை ரோமானியர்களை வந்தடைகிறது, மேலும் பவுலை மரிக்கும்படி அடிப்பது ஆபத்தானது என்று அதைத் தடுக்க சரியான நேரத்தில் அது வந்து சேர்கிறார்கள். பவுல் வன்முறைக் கும்பலிலிருந்து விளக்கி வைக்கப்படுகிறான், மேலும் தன்னைத் துன்புறுத்துபவர்களுடன் உரையாற்ற ஒரு வாய்ப்பை வழங்கும்படி தளபதியை சமாதானப்படுத்துகிறான். அடித்ததன் மூலம் நொறுக்கப்பட்டு இரத்தக்களரியாக நின்று கொண்டிருந்தாலும் பவுல் தைரியமாக தனது சரித்திரத்தை பகிர்ந்து கொள்கிறான். தனது வாழ்க்கையை முடிக்க முற்படும் மக்களை வற்புறுத்தவும் தன்னை அடையாளம் கண்டு கொள்ளவும் அவன் ஒரு எபிரேய பேச்சுவழக்கில் பேசுகிறான். தனது மீட்புத் திட்டத்தில் புறஜாதியாரை (யூதரல்லாதவர்களை) சேர்க்க வேண்டும் என்ற தேவனின் விருப்பத்தைப் பற்றி பேசத் தொடங்கும் வரை ஒவ்வொரு விவரத்தையும் அவர்கள் கேட்கிறார்கள். இந்த நேரத்தில், கூட்டம் உடனடியாக பவுலுக்கு எதிராக மரண அச்சுறுத்தல்களுடன் கத்த ஆரம்பிக்கிறது. இது குழப்பமானது, புறஜாதியாரைப் பற்றி பேசியதற்காக யூதர்கள் ஏன் பவுலிடம் கோபப்படுவார்கள் என்பதை ரோமானிய தளபதியால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே இந்தசம்பவத்துக்கு பின் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும், மேலும் சித்திரவதை அதை அவரிடமிருந்து வெளியேற்றக்கூடும் என தளபதி எண்ணுகிறார். ஆனால் அவன் தான் ஒரு ரோமானிய குடிமகன் என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் பவுல் தனக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கையை நிறுத்துகிறான். ஒரு ரோமானியருக்கு தீங்கு விளைவித்ததற்காக தான் சிக்கலில் சிக்கியிருக்க முடியும் என்று தளபதி உணர்ந்தார், எனவே பவுல் விரைவில் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டான், மேலும் அவன் மீது குற்றஞ்சாட்டிய மதத் தலைவர்கள் முன் தனது வழக்கை முன்வைக்கக்கூடிய ஒரு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகிறான்.

நாள் 35நாள் 37

இந்த திட்டத்தைப் பற்றி

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப...

More

இந்தத் திட்டத்தை வழங்கிய பைபிள் ப்ராஜெக்ட்டுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். கூடுதல் தகவல்களுக்கு, இந்த இணையதளத்தை காண அழைக்கிறோம்: www.bibleproject.com

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்