திட்ட விவரம்
இந்த உலகளாவிய பெருந்தொற்றின் போது பயத்திற்கு பதிலாக விசுவாசத்தை கொண்டிருப்பதுமாதிரி
அவர் அனைத்தையும் அறிந்திருக்கிறார் /strong>
பயத்தின் வேளைகளில் திடமான விசுவாசத்தை கொண்டிருப்பது கடினமாக இருக்கக்கூடும். உன்னை சுற்றிலும் வெறும் கவலையும் நிச்சயமற்ற தன்மையையும் காணும்போது, அது உன் எண்ணங்களையும், அனுதின ஜீவியத்தையும் பாதிக்காமல் காப்பது கடினம். நாம் எப்படி நம்முடைய விசுவாசத்தில் நிலைத்து நிற்பது? இன்றைய தியானத்தில், நீங்கள் பயத்தில் சிக்கி கொள்ளாமல் இருக்க வழிமுறைகளை பகிர்கிறேன்.
ஜீவியத்தில் அப்பியாசிக்க வேண்டிய கேள்விகள்
- இந்த நேரத்தில் உன்னுடைய விசுவாசத்தில் எவ்வளவு திடமாக உணருகிறாய்? ஏன் இந்த நிலை என்று நினைக்கிறாய்?
- இந்த கொரோன வைரஸ் பெருந்தொற்றின் நிகழ்வுக்கு உன்னுடைய பிரதிகிரியை நீ இயேசுவின்மீது கொண்டிருக்கும் விசுவாசத்தை குறித்து என்ன சொல்கிறது?
- இப்போது நீ வேதத்தை திறந்து சங்கீதம் 139:16-ஐ வாசி. நீ உருவாக்கப்படும் முன்னமே தேவன் உனக்காக உருவாக்கப்பட்ட நாட்களை குறித்து எழுதியிப்பதை குறித்து நீ என்ன உணர்கிறாய்?
- இந்த வார்த்தைகள் உனக்கு என்ன அர்த்தத்தை கொடுக்கும், உன்னுடைய கடைசி நாளில், அது என்று வந்தாலும் (சீக்கிரமோ, தாமதமாகவோ)?
- இந்த வல்லமையான வார்த்தைகளை பரிசுத்த ஆவியானவர் உன்னுடைய இருதயத்தில் எழுத தேவனிடம் கொஞ்ச நேரம் ஜெபி.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
அநேக இருதயங்களை பயம் பிடித்து கொண்டிருக்கும் வேளையில் - இயேசுவை நம்பும் இதயங்களையும் - நாம் ஒரு முடிவை எடுக்கும் வேளையாக இது இருக்கிறது. நாம் நம்முடைய விசுவாசத்தில் தைரியமாக நிற்க, நம்மை சுற்றிலும் இருக்கும் மக்களுக்கு இ...
More