திட்ட விவரம்

ஆபாசமான காட்சிகளினால் வரும் சோதனையைத்மாதிரி

ஆபாசமான காட்சிகளினால் வரும் சோதனையைத்

3 ல் 3 நாள்

ஆபாசமான காட்சிகளினால் வரும் சோதனையை  மேற்கொள்ள மூன்றாவது  வார்த்தை  ‘சுத்தம் செய்ய  பயன்படுத்தும்  துடைப்பதின்  வழி’ 


என்னை   பொறுத்தவரையில்  ‘துடைப்பம்’ , நியாயத் தீர்ப்பின்  ஒரு உருவகம்.   என்னுடைய  தாய்மொழி  தமிழில்  ஒரு மேற்கோள்  உண்டு! உணர்ச்சி வசப்பட்டு  எரிச்சலடைந்தவர் "உன்னைத்  துடைப்பத்தால்  அடிப்பேன்"  என்று  சொல்வதைக்  கேட்டிருக்கிறேன்.  தன்னுடைய  மக்களின் கடினமான  இருதயத்தினிமித்தம்  கடவுள்  கோபப்பட்டதைப்  பல  இடங்களில்  வாசிக்கிறோம்.  78-ம்  சங்கீதத்தில்  அப்படிப்பட்ட  ஒரு  சம்பவத்தை வாசிக்கிறோம்.. "அவர்கள் புசித்துத் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் இச்சித்ததை அவர்களுக்குக் கொடுத்தார். ஆனாலும் அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; ஆகவே,  அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே,  தேவ கோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து, இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று (சங் 78:29-31)".  தேவன் விரும்பாத  அந்த "போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே" என்ற வார்த்தையை  கவனியுங்கள்.  கடவுளுடைய  பொறுமைக்கு  இடையூறு  விளைவிக்கும்பொழுது,  அவருடைய  நியாயத் தீர்ப்பு  வருகிறது . அவர் ‘துடைப்பம்’  முறையில்    நியாயத் தீர்ப்பு  செய்கிறார் . சரீரத்தை  உருவாக்கினவரைத் (யேகோவா)   தேடாமல்,   சரீர  இச்சைகளைத்  தீர்த்துக் கொள்ள  விரும்பியவர்களைச்  சங்கரிக்கிறார் . எந்த  உணவை  அவர்கள்  சாப்பிடக்கூடாதோ, அதைச்  இச்சித்து   புசித்துக்கொண்டிருக்குபோதே  அவர்கள்  செத்து போனார்கள் .  நாமும்  மாமிச  இச்சைக்கு  இடம் கொடுத்து,, ஆபாச  காட்சிகளைக்  காணும்போது  கடவுள்  அவ்விதமாகவே  தண்டிக்கலாம் . அவர்  அவ்வாறு  செய்யவில்லையெனில், அதை நாம்   செய்தது  சரியென்று  அர்த்தமில்லை . நாம்    மனம்  திருப்ப  வேண்டுமென  அவர்  நமக்கு  வாய்ப்பு   கொடுக்கிறார் (2 பேதுரு 3:9). ஆபாச  காட்சிகளை  பார்த்து கொண்டிருக்கும்போதே  அவர் நம்மை   சங்கரிக்க  தீர்மானிக்க  முடியும் .  நடு  ராத்திரி  வேலையில்  நாம்  ஆபாச  காட்சிகளை  இணைய  தளத்தில்  தேடிக் கொண்டிருக்கும்போதே  அவர்  பூமிக்கு  திரும்பி  வர  தீர்மானிக்க கூடும் .  ‘திருடன்  வருகிறதுபோல’ , இயேசு  நாம்  நினையாத  நேரத்தில்  வரக்கூடும்  என்ற  அறிவானது நாம் பரிசுத்தமாக  வாழ தூண்டுகிறது.   இக்கருத்தைதான்   2பேதுரு  3:10-11 -ல்   பேதுரு  குறிப்பிட்டு  சொல்லுகிறார் . எல்லாம்  கிருபை  என  போதிக்கும்  கள்ள  போதகர்கள். பரிசுத்தமான   வாழ்வை  ஊக்கப்படுத்துவதில்லை . பரிசுத்த  வாழ்வை  முக்கியப்படுத்துவதே  சரியான  உபதேசம். ."விழுந்து  விடாதே" என்பதே  புதிய  ஏற்பாடு  விசுவாசிகளுக்கு  கூறும்  அறிவுரையாகும் (1 கொரி 10:12).  ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்திருந்தார்களென்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள்.  அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம் பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக. அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக"     என்ற   அறிவுரையை  பவுல்  1 கொரிந்தியர்  10: 7-10-ல் குறிப்பிட்டுள்ளார். 


பிரியமானவரே , மேற்கூறிய  மூன்று  வார்தைகளான  (Groom/Room/Broom) ஆத்தும  நேசர், அறை, மற்றும்  துடைப்பம் ஆகியவற்றின் படிப்பினைகள்  மூலம்  ஆபாசக்  காட்சிகளின்  இச்சைகளை  ஜெயிக்க  தேவன்  உங்களுக்கு  உதவுவாராக! 

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

ஆபாசமான காட்சிகளினால் வரும் சோதனையைத்

ஆபாசமான  காட்சிகளைக்   பார்க்கும்படி  வருகின்ற  சோதனையை  ஜெயிப்பதற்குரிய வழியை , வேத  புத்தகத்தின்  அடிப்படையில்   வாசகர்கள் அறிந்து கொள்ள இது  உதவியாக  அமையும்:- “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கு...

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக டுக் ஜெயராஜிற்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://www.facebook.com/dukebook

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்