நம்பிக்கை
ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்
வெளிப்புறத்தில் சாதாரண வாழ்க்கை வாழ்வதுபோல் தோன்றும் இந்த தைரியமான விவிலிய பெண்ணின் வாழ்க்கை உண்மையிலேயே தோல்விகளாலும், சோதனைகளாலும், அவளுக்கு எதிரான சூழ்நிலைகளாலும் நிறைந்திருதாலும் அவளுடைய விசுவாசமுள்ள கீழ்ப்படிதாலும் ஒப்புக்கொடுத்தலும் ஒரு முக்கியமான வரலாறுக்கு வழிவகுக்கிறது.
தேவன் நம்மோடு
கிறிஸ்துமஸ் என்பது மிகுந்த மகிழ்ச்சியின் காலம், நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் பிறப்பைக் குறிக்கிறது. இயேசுவின் வருகையைப் பற்றி பைபிள் முழுவதும் பல தீர்க்கதரிசனங்கள் உள்ளன, இந்த தியானம் மூலம், தேவன் வருவதை அறிவிக்க வேதத்தில் தேவன் பயன்படுத்தும் ஏழு பெயர்களைப் பார்ப்போம். இந்த பெயர்களில் ஒவ்வொன்றையும் இயேசு எவ்வாறு உள்ளடக்குகிறார் என்பதையும், அவர் பூமியில் நடந்தபோது இன்றும் நமக்குப் பொருத்தமாக இருப்பதையும் ஆராய்வோம்.
உயிர்த்தெழுதலின் கதை
உங்கள் வாழ்க்கையின் கடைசி வாரம் அதுதான் என்று தெரிந்தால் அதை நீங்கள் எவ்வாறு செலவிடுவீர்கள்? இயேசு பூமியில் மனித வடிவத்தில் இருந்த கடைசி வாரம் மறக்கமுடியாத தருணங்கள். நிறைவான தீர்க்கதரிசனங்கள், கூடி நெருங்கிய ஜெபம், ஆழமான விவாதம், அடையாளச் செயல்கள், மற்றும் உலகையே புரட்டிப்போடும் நிகழ்வுகளால் நிறைந்திருந்தது. உயிர்த்தெழுதலுக்கு முந்தைய திங்கட்கிழமை தொடங்கும் வண்ணமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Life.Churchன் வேத திட்டம் இப்புனித வாரத்தில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு ஊடாக உங்களை அழைத்து செல்லும்.
உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்
ஜாய்ஸ் மேயரின் நடைமுறை வேதபாட போதனையுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான வேத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும், உங்கள் மனதைப் புதுப்பிக்க உதவுகிறது மற்றும் ஒவ்வொரு நாளும் நீங்கள் நோக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் என்பதைக் கண்டறிய உதவுகிறது!
கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்
கவலை என்பது அதன் எல்லா வடிவங்களிலும் நம்மை பலகீனமாக்கிவிடக் கூடியது. அது நம்மைத் தடுமாறச் செய்து பயத்திலேயே நம்மைக் கட்டிப் போட்டுவிடக்கூடியது. ஆனாலும் இதுவே கதையின் முடிவு அல்ல. இயேசுவில் நாம் சுதந்தரத்தையும், கிருபையையும் பெற்றுக் கொண்டு போராட்டங்களை மேற்கொள்ள முடியும். நாம் அதை வெற்றி கொள்வது மட்டுமல்ல, அதன் மூலமாக இன்னும் சிறப்பானவர்களாக மாற முடியும்.
உயிருள்ள நம்பிக்கை: உயிர்தெழுதல் நாளுக்கு முன்
இருள் உங்களை சூழும் போது, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த மூன்று நாட்களும், உயிர்த்தெழுதல் சம்பவத்தில் மூழ்கி, கைவிடப்பட்டவராக, தனிமையாக, மதிப்பற்றவராக நீங்கள் உணரும் போது, நம்பிக்கையை எப்படி பற்றிக் கொள்வது என்று கண்டறியுங்கள்.
கவலை
அறியாதவற்றை பற்றிய கவலையாலும் பயத்தாலும் நம் வாழ்க்கை எளிதாக நிரம்பி விடலாம். ஆனால் தேவன் நமக்கு பயம் மற்றும் கவலையின் ஆவியை கொடாமல், தைரியத்தின் ஆவியை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவனிடம் நீங்கள் திரும்ப இந்த ஏழு நாள் திட்டம் உங்களுக்கு உதவும். கவலைக்கு தீர்வான முடிவு தேவனிடம் உங்கள் நம்பிக்கையை வைப்பது தான்.
முழுமையை நோக்கும் சபை
சபையாக கூடி வாழும் வாழ்வில் முழுமைப் பெற வாஞ்சிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது . கடவுள் இதை விரும்புகிறார். அவர் தம் ஊழியர்களை தெரிந்து, பயிற்றுவித்து சபையை முழுமையை நோக்கி பயணிக்க வைக்கிறார். இதன் வழியில் வரும் சங்கடங்கள் தெரிந்திருக்க வேண்டும். தார்ப்பரியங்களை தைரியமாய் கூறி, தேவைப் பட்டால் தழும்புகள் பெற்றும் இப்பாதையில் நம்மை நடத்தும் தலைவர்களையும் கொண்டிருக்க வேண்டும் . தரிசனங்களும் வெளிப்பாடுகளும் நமது பெலத்தையும், பெலவீனத்தையும் வெளிக்கொணற வேண்டும். களத்திருச்சபைகளை பெற்று அதன் மீது கரிசனை கொள்ளவேண்டும். அப்போதைக்கு அப்போது அத்து மீறி நடப்போரை கண்டித்துணர்த்தி கை கோர்த்து திருத்தி வாழ பிரயாசம் வேண்டும். முழுமையை பெற்றோம் என்றல்ல அடைவோம் என்ற நம்பிக்கையோடு தேவ அன்பிலும், கிறிஸ்துவின் கிருபையாலும், பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியத்திலும் வேரூன்றி முடிவுபரியந்தம் நிலைத்து வாழ்வோம். நித்தியம் நமது முழுமை. ஆமென்.
இயேசுவைபோல நேசியுங்கள்
நாம் இயேசுவை முதலாவது நேசிக்காமல் அவரைப்போல வாழ எப்படி கற்றுக்கொள்ளமுடியும்? Life.Church ஊழியர்கள் மற்றும் அவர்கள் தம்பதிகளோடு சேர்ந்து வாசியுங்கள். இதன்மூலம் இயேசுவைபோல் வாழவும் நேசிக்கவும் அவர்களை ஊக்குவிக்கும் வேதவசனங்களையும் அனுபவங்களையும் தெரிந்துகொள்வீர்கள்.