சங்கீத புத்தகம் 45:5-17

சங்கீத புத்தகம் 45:5-17 TAERV

உமது அம்புகள் ஆயத்தமாயுள்ளன. நீர் பலரைத் தோற்கடிப்பீர். உமது பகைவர்கள் மீது ராஜாவாயிரும். தேவனே, உமது ஆட்சி என்றென்றும் தொடரும். நன்மையே உமது செங்கோலாகும். நீர் நன்மையை விரும்பித் தீமையைப் பகைக்கிறீர். எனவே உமது தேவன் உம் நண்பர்களுக்கு மேலாக உம்மை ராஜாவாக்கினார். வெள்ளைப்போளம், இலவங்கம், சந்தனம் ஆகியவற்றின் நறுமணம் உம் ஆடைகளில் வீசும். தந்தத்தால் மூடப்பட்ட அரண்மனைகளிலிருந்து உம்மை மகிழ்வூட்டும் இசை பரவும். மணத்தோழியரே ராஜாவின் குமாரத்திகள் ஆவர். உமது வலப் பக்கத்தில் மணப்பெண் பொன்கிரீடம் சூடி நிற்கிறாள். மகளே, கேள், கவனமாகக் கேள், நீ புரிந்துகொள்வாய். உன் ஜனங்களையும், உன் தந்தையின் குடும்பத்தையும் மறந்துவிடு. ராஜா உன் அழகை விரும்புகிறார். அவர் உன் புது மணமகன். நீ அவரைப் பெருமைப்படுத்துவாய். தீருவின் செல்வந்தர்கள் ஜனங்கள் உனக்குப் பரிசுகள் தருவார்கள். அவர்கள் உன்னைக் காண விரும்புவார்கள். அரச குமாரத்தி பொன்னில் பதிக்கப் பெற்ற விலையுயர்ந்த அழகிய மணியைப் போன்றவள். மணமகள் அழகிய ஆடையணிந்து ராஜாவிடம் அழைத்துவரப்பட்டாள். மணத் தோழியர் அவளைத் தொடர்ந்தனர். அவர்கள் மகிழ்ச்சி பொங்க வந்தனர். மனமகிழ்வோடு அரண்மனைக்குள் நுழைந்தனர். ராஜாவே, உம் குமாரர்கள் உமக்குப் பின் ஆட்சி செய்வார்கள். தேசம் முழுவதும் அவர்களை ஆளச் செய்வீர். உமது நாமத்தை என்றென்றும் புகழ் பெறச் செய்வேன். என்றென்றும் ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள்.