சங்கீத புத்தகம் 24:1-10

சங்கீத புத்தகம் 24:1-10 TAERV

பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை. உலகமும் அதன் ஜனங்களும் அவருக்கே உரிமையாம். கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார். ஆறுகளின் மீது அதை உண்டாக்கினார். கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்? கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் யார் நிற்கக்கூடும்? யார் அங்கு வழிபட முடியும்? தீயவை செய்யாத ஜனங்களும், பரிசுத்த இருதயம் உடையோரும், பொய்யை உண்மையெனக் கூறுவதற்கு என் பெயரைப் பயன்படுத்தாதோரும், பொய்யும், பொய்யான வாக்குறுதிகளும் அளிக்காதோரும், மட்டுமே அங்கு தொழுதுகொள்ள முடியும். நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள். அந்த நல்ல ஜனங்கள் தங்கள் இரட்சகராகிய தேவனை நல்லக் காரியங்களைச் செய்யச் சொல்வார்கள். அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள். யாக்கோபின் தேவனிடம் உதவி வேண்டி அவர்கள் செல்வார்கள். வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்! பழைமையான கதவுகளே! திறவுங்கள்! மகிமை வாய்ந்த ராஜா உள்ளே வருவார். யார் இந்த மகிமைமிக்க ராஜா? கர்த்தரே அந்த ராஜா. அவரே வல்லமையுள்ள வீரர். கர்த்தரே அந்த ராஜா. அவரே போரின் நாயகன். வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்! பழைமையான கதவுகளே, திறவுங்கள்! மகிமை மிக்க ராஜா உள்ளே வருவார். யார் அந்த மகிமை மிக்க ராஜா? சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த ராஜா. அவரே மகிமை மிக்க ராஜா.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீத புத்தகம் 24:1-10

வாழ்க்கையின் உக்கிராணத்துவம் சங்கீத புத்தகம் 24:1-10 பரிசுத்த பைபிள்

வாழ்க்கையின் உக்கிராணத்துவம்

7 நாட்கள்

உக்கிராணத்துவம் என்கிற வார்த்தையை நினைக்கும் போது, நாம் அதை பணத்தோடு மட்டுமே சம்பந்தப்படுத்திப் பார்க்கிறோம். ஆனால் உக்கிராணத்துவம் என்ற வார்த்தைக்கு “நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டதை கவனமாக வைத்துக் கொள்ளுதல்” என்பதே அர்த்தம். இதில் பணமும் அடங்கும். இந்த வாழ்க்கையும் நம்மிடம் உள்ள அனைத்தும் நமக்கு சொந்தமானவை அல்ல, அவை கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்டவை, அவைகளைக் குறித்த கணக்கை நாம் கடவுளிடம் ஒப்புவிக்க வேண்டும் என்ற உண்மையை இந்த 7 நாட்கள் தியானத் திட்டத்தில் நாம் கற்றுக் கொள்ளப்போகிறோம். இதுவே வாழ்க்கையின் உக்கிராணத்துவம்.