யோபுடைய சரித்திரம் 10:1-7

யோபுடைய சரித்திரம் 10:1-7 TAERV

“நான் என் சொந்த வாழ்க்கையை வெறுக்கிறேன். எனவே நான் தாராளமாக முறையிடுவேன். என் ஆத்துமா கசந்துபோயிற்று, எனவே நான் இப்போது பேசுவேன். நான் தேவனிடம், ‘என்னைக் குற்றம்சாட்டாதேயும்! நான் செய்தவற்றை எனக்குக் கூறும், எனக்கெதிராக உமது காரியம் என்ன?’ என்பேன். ‘தேவனே, என்னைத் துன்புறுத்துவது உமக்கு மகிழ்ச்சித் தருகிறதா? நீர் உண்டாக்கினதைக் குறித்து நீர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அல்லது தீயோர் செய்த திட்டங்களில் நீர் மகிழ்ச்சிக்கொள்கிறீரா? தேவனே, உமக்கு மனிதரின் கண்கள் உண்டா? மனிதர் காண்பதுபோல் நீர் காரியங்களைப் பார்க்கிறீரா? எங்களைப்போல உமது வாழ்க்கையும் குறுகியதா? மனிதனின் வாழ்க்கையைப் போல் உமது வாழ்க்கையும் குறுகியதா? இல்லை! எனவே அது எப்படிப்பட்டது என்பதை எவ்வாறு அறிவீர்? எனது தவறுகளைப் பார்க்கிறீர், என் பாவங்களைத் தேடுகிறீர். நான் களங்கமற்றவன் என்பதை நீர் அறிந்திருந்தும் உமது ஆற்றலிலிருந்து தப்பித்துக்கொள்ள வழியில்லை!