சங்கீதம் 128

128
சங்கீதம் 128
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.
1யெகோவாவுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்கும்
அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
2உன் உழைப்பின் பலனை நீ சாப்பிடுவாய்;
ஆசீர்வாதங்களும் செல்வச் செழிப்பும் உன்னுடையவைகளாகும்.
3உன் மனைவி உன் வீட்டிற்குள்
கனி நிறைந்த திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்;
ஒலிவமரத்தைச் சுற்றித் தளிர்கள் இருப்பதுபோல்,
உன் பிள்ளைகள் உன் பந்தியிலே உன்னைச் சுற்றி இருப்பார்கள்.
4ஆம், யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற மனிதன்
இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுகிறான்.
5யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக;
உன் வாழ்நாட்களெல்லாம்
எருசலேமின் செழிப்பை நீ காண்பாயாக.
6நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காணும்வரை வாழ்ந்திருப்பாயாக;
இஸ்ரயேலின்மீது சமாதானம் இருப்பதாக.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங்கீதம் 128: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்