சங்கீதம் 1

1
பகுதி i
சங்கீதம் 1–41
சங்கீதம் 1
1-2தீயவர்களின் அறிவுரையின்படி நடவாமல்,
பாவிகளின் வழியில் நில்லாமல்,
பரிகாசக்காரருடன் உட்காராமல்,
யெகோவாவினுடைய சட்டத்திலே மனமகிழ்ச்சியாயிருந்து,
இரவும் பகலும் அவருடைய வேதத்தை தியானிக்கிறவர் ஆசீர்வதிக்கபட்டவர்.
3அப்படிப்பட்டவர் நீரோடைகளின் அருகே நாட்டப்பட்டு,
பருவகாலத்தில் தன் பழங்களைக் கொடுத்து,
இலை உதிராதிருக்கும் மரத்தைப்போல இருக்கிறார்.
அவர் செய்வதெல்லாம் செழிக்கும்.
4தீயவர்களோ அப்படியல்ல,
அவர்கள் காற்றினால் அடித்துச் செல்லப்படும்
பதரைப்போல் இருக்கிறார்கள்.
5ஆகையால் நியாயத்தீர்ப்பின்போது தீயவர் தப்புவதில்லை,
பாவிகளுக்கு நீதிமான்களின் கூட்டத்தில் இடமுமில்லை.
6ஏனெனில் நீதிமான்களின் வழியை யெகோவா கண்காணிக்கிறார்;
தீயவர்களின் வழியோ அழிவுக்குக் கொண்டுசெல்லும்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங்கீதம் 1: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்