யோபு முன்னுரை

முன்னுரை
இது ஒரு நீண்ட உரையாடல். மனிதனின் மிகக்கடினமான பிரச்சனைகளை இது சுட்டிக்காட்டுகிறது. வல்லமையுள்ள இறைவன் ஒருவர் இருக்கும்போது பாவமும் துன்பமும் வாழ்வில் இடம் பெறுவது ஏன்? யோபுவின் துன்பத்துடன் ஆரம்பமாகும் இந்நூலில் அவனுடைய நண்பர்களான எலிப்பாஸ், பில்தாத், சோப்பார் ஆகியோரால் கொடுக்கப்படும் மூன்று உரையாடல்களும் இடம் பெறுகின்றன. மூவருமே யோபுவின் அவலநிலை குறித்து வெவ்வேறு விதமான விளக்கங்களைக் கொடுக்க முயற்சிக்கிறார்கள். நான்காவதாக, எலிகூ என்றொரு மனிதன், நிலைமையைத் தொகுத்துக்கூற முயற்சிக்கிறான். யோபு ஏன் துன்பப்படுகிறான் என்பதற்கு அவன் வேறொரு விளக்கத்தைக் கொடுக்கிறான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

யோபு முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்