பிரசங்கி 11:4-6

பிரசங்கி 11:4-6 TCV

காற்றைப் பார்த்துக் கொண்டிருப்பவன் விதைக்கமாட்டான்; மழைமேகங்களை நோக்கிப் பார்த்திருக்கிறவன் அறுவடை செய்யமாட்டான். காற்றின் வழியையோ, தாயின் கருப்பையில் குழந்தை உருவாகும் விதத்தையும் உன்னால் அறிய முடியாது. அதுபோலவே எல்லாவற்றையும் படைக்கும் இறைவனின் செயல்களையும் விளங்கிக்கொள்ள உன்னால் முடியாது. உனது தானியத்தைக் காலையில் விதை, பிற்பகல் முழுவதும் உனது கைகளை நெகிழவிடாமல் விதை. இதுவோ, அதுவோ, எது பலன் தரும் என்பது உனக்குத் தெரியாதே; ஒருவேளை இரண்டுமே நல்ல பலனைக் கொடுக்கலாம்.

Verse Image for பிரசங்கி 11:4-6

பிரசங்கி 11:4-6 - காற்றைப் பார்த்துக் கொண்டிருப்பவன் விதைக்கமாட்டான்;
மழைமேகங்களை நோக்கிப் பார்த்திருக்கிறவன் அறுவடை செய்யமாட்டான்.

காற்றின் வழியையோ,
தாயின் கருப்பையில் குழந்தை உருவாகும் விதத்தையும் உன்னால் அறிய முடியாது.
அதுபோலவே எல்லாவற்றையும் படைக்கும்
இறைவனின் செயல்களையும் விளங்கிக்கொள்ள உன்னால் முடியாது.

உனது தானியத்தைக் காலையில் விதை,
பிற்பகல் முழுவதும் உனது கைகளை நெகிழவிடாமல் விதை.
இதுவோ, அதுவோ,
எது பலன் தரும் என்பது உனக்குத் தெரியாதே;
ஒருவேளை இரண்டுமே நல்ல பலனைக் கொடுக்கலாம்.