சங் 13

13
சங்கீதம் 13
சங்கீத தலைவரிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
1யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர்,
எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
2என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து,
எதுவரைக்கும் என்னுடைய ஆத்துமாவிலே ஆலோசனை செய்துகொண்டிருப்பேன்?
எதுவரைக்கும் என்னுடைய எதிரி என்மேல் தன்னை உயர்த்துவான்?
3என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து,
எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம்
அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும்.
4அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி,
நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும்.
5நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்;
உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும்.
6யெகோவா எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங் 13: IRVTam

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்