வாசிப்புத் திட்டங்கள்

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 6:26

தேவனுக்கே முதலிடம் கொடுங்கள்

தேவனுக்கே முதலிடம் கொடுங்கள்

5 நாட்கள்

நமது வாழ்வில் தேவனுக்கு முதலிடம் கொடுப்பது என்பது ஒரேயொருமுறை நடக்கும் செயல் அல்ல; அது, ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் வாழ்நாளெல்லாம் நடக்கும் தொடர்நிகழ்வு. நீங்கள் பலவருட அனுபவம் மிக்க கிறிஸ்தவரானாலும் சரி, புதிய விசுவாசியானாலும் சரி, வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வுக்கு பலனுள்ள வியூகமாக இருக்கிற இந்த வாசிப்புத்திட்டம், உங்களால் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், நடைமுறையில் பயிற்சிக்கக்கூடியதாகவும் இருக்கும். இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

பாதுகாப்பு வேலிகள்: மனஸ்தாபங்களைத் தவிர்த்தல்

பாதுகாப்பு வேலிகள்: மனஸ்தாபங்களைத் தவிர்த்தல்

5 நாட்கள்

நமது வாகனங்கள் ஆபத்தான அல்லது வரம்புக்கு மீறிய பகுதிகளுக்குச் செல்லாமல் இருக்க தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. நமக்கு அதன் தேவை ஏற்படும் வரை நாம் அவைகளை கண்டுகொள்வது இல்லை - ஆனால் பின்னர் அவைகள் அங்கு இருந்ததற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம். நமது உறவுகள், நிதிகள் மற்றும் தொழில்கள் ஆகியவற்றிலும் தடுப்புகள் இருந்திருந்தால் என்ன? அவை எப்படி இருக்கும்? எதிர்கால பின்வருத்தங்களிலிருந்து நம்மை எவ்வாறு அது தடுக்கும்? அடுத்த ஐந்து நாட்களுக்கு, சுய தடுப்பு வேலிகளை எவ்வாறு அமைத்துக்கொள்வது என்பதை ஆராய்வோம்.

தெய்வீக திசை

தெய்வீக திசை

7 நாட்கள்

தினம்தோறும் நாம் வாழ்க்கையின் கதையை வடிவமைக்கும் முடிவுகளை தேர்ந்தெடுக்கிறோம். ஒருவேளை இப்படி தேர்ந்தெடுப்பதில் நீங்கள் தேறினவராகிவிட்டால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? நியூயார்க் டைம்ஸ் சிறந்த எழுத்தாளர் மற்றும் லைஃ.சர்ச் தலைமை போதகரான க்ரைக் குரோவ்ஷெல் எழுதின தெய்வீக திசை வேதாகம திட்டம், அவருடைய தெய்வீக திசை என்ற புத்தகத்திலிருந்து ஏழு அடிப்படை கொள்கைகளைக் கொண்டிருக்கிறது, அது நாம் தினந்தோறும் தேவ ஞானத்துடன் முடிவுகளை எடுக்க நமக்கு உதவி செய்து ஊக்கப்படுத்துகிறது. தேவன் மகிமைப் படும்படியான, மற்றும் மற்றவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவதான ஒரு வாழ்க்கைக் கதை நீங்கள் வாழத் தேவையான ஆவியின் வழிகாட்டுதலை இத்திட்டத்தில் கண்டறிக.

மனதை மறுசீரமைக்க: பாவத்திற்கு எதிர்த்து நில் - 10 நாட்கள் தியானத் திட்டம்.

name - https://my. bible. com/reading-plans/12779-rewire-your-heart-10-days-to-fight-sin

மனதை மறுசீரமைக்க: பாவத்திற்கு எதிர்த்து நில் - 10 நாட்கள் தியானத் திட்டம். name - https://my. bible. com/reading-plans/12779-rewire-your-heart-10-days-to-fight-sin

10 நாட்கள்

பற்களைக் கடித்துக் கொண்டு, சோதனையைச் சகித்துக் கொள்ளுவது தான் பாவத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழி எனப் பல கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். உண்மையில், நமது சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், பாவத்தை எதிர்த்துப் போராட முடியாது; நம்முடைய இதயப் பூர்வமான உணர்வுகளின் வழியாகத் தான் போராட வேண்டும். உங்கள் இதயத்தை மறுசீரமைக்கவும் என்ற புத்தகத்தின் அடிப்படையில், இந்த வாசிப்புத் திட்டம் தொகுக்கப்பட்டுள்ளது. ஆக அடுத்து வரும் பத்து தினங்கள், மனதைப் பற்றிய சில முக்கியமான வேத வசனங்களைத் தியானிக்கலாம். இந்த வேத வார்த்தைகள், நம் மனதைச் சீர்படுத்த உதவும். அத்துடன் எவ்விதம் பாவத்தை எதிர்த்துப் போராடுவது என்பதையும் கற்றுத் தரும்.

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

30 நாட்களில்

இயேசு கிறிஸ்து பெரும்பாலும் போதிப்பதற்கு உவமைகளையே பயன்படுத்தினார். அதற்குக் காரணம் உண்டு: இந்த எளிய, ஆனால் ஆழமான கதைகள், ஆழ்ந்த ஆவிக்குரிய உண்மைகளையும், என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைப் பாடங்களையும், அவருடைய சீடர்கள் மற்றும் பொது மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருந்தன. இந்தக் கதைகள் சொல்லப்பட்ட வரலாற்று மற்றும் கலாச்சாரப் பின்னணியை நாம் ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது —அதை முதலில் கேட்டவர்களுக்கு அவை எந்தப் பொருளை உணர்த்தியதோ, அதே வகையில் நாமும் அதை புரிந்து உணர்ந்துகொள்ள நமக்கு உதவும்.