மாற்கு முன்னுரை

முன்னுரை
அப்போஸ்தலனாகிய பவுலுடன் ஊழியத்தில் ஈடுபட்ட யோவான் என்ற மாற்குவினால் இந்த நற்செய்தி எழுதப்பட்டது.
இவர் பேதுருவுடன் நெருங்கிய நண்பனாக இருந்ததாக வரலாறு கூறுகிறது. கி.பி. 60 ம் ஆண்டிலிருந்து 65 ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் ரோம் நகரத்திலிருந்து எழுதப்பட்ட இந்த புத்தகத்தில், இயேசுவின் போதனைகளைவிட அவருடைய செயல்களையே இவர் அதிகமாகக் குறிப்பிடுகிறார். இறைவனின் திட்டத்தை நடைமுறைப்படுத்த வந்த இறைவனின் ஊழியனாகவே இயேசுவை மாற்கு காண்பிக்கிறார்.
துன்புறுத்தல்களுக்குள்ளான காலத்தில் வாழ்ந்த கிறிஸ்துவின் சீடர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே மாற்கு இதை எழுதினார்.

Paryškinti

Dalintis

Kopijuoti

None

Norite, kad paryškinimai būtų įrašyti visuose jūsų įrenginiuose? Prisijunkite arba registruokitės