YouVersion Logo
Search Icon

சங்கீதம் 3

3
சங்கீதம் 3
தாவீது தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பி ஓடுகையில் பாடிய சங்கீதம்.
1யெகோவாவே, என் பகைவர்கள் எத்தனை பேராய் இருக்கிறார்கள்!
எத்தனைபேர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்.
2அநேகர் என்னைக்குறித்து,
“இறைவன் அவனை விடுவிக்கமாட்டார்” என்று சொல்கிறார்கள்.#3:2 எபிரெய மொழிப் பிரதிகளில் சேலா என்ற வார்த்தை இங்கும் 4 மற்றும் 8 ஆவது வசனத்தின் பின் பகுதியிலும் வருகிறது.
3ஆனால் யெகோவாவே, நீர் என்னைச் சுற்றிலும் கேடயமும்,
என் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாய் இருக்கிறீர்.
4நான் சத்தமிட்டு யெகோவாவைக் கூப்பிடுகிறேன்;
அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்குப் பதில் கொடுக்கிறார்.
5நான் படுத்துக்கொண்டு உறங்குகிறேன்;
யெகோவா என்னைத் தாங்குவதால், நான் திரும்பவும் விழித்தெழுகிறேன்.
6எல்லாப் பக்கங்களிலும் பதினாயிரம்பேர் எனக்கு விரோதமாய் நின்றாலும்,
நான் பயப்படமாட்டேன்.
7யெகோவாவே, எழுந்தருளும்;
என் இறைவனே, என்னை விடுவியும்.
என் எதிரிகள் எல்லோரையும் கன்னத்தில் அடித்து,
கொடியவர்களின் பற்களை உடைத்துப்போடும்.
8யெகோவாவிடமிருந்தே விடுதலை வருகிறது.
உம்முடைய ஆசீர்வாதம் உமது மக்களின்மேல் இருப்பதாக.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in