YouVersion Logo
Search Icon

சங்கீதம் 24

24
சங்கீதம் 24
தாவீதின் சங்கீதம்.
1பூமியும் அதிலிருக்கும் ஒவ்வொன்றும் யெகோவாவினுடையவை,
உலகமும் அதில் வாழும் அனைவரும் அவருடையவர்கள்.
2ஏனென்றால் அவர் பூமியைக் கடலின்மேல் நிறுவி,
தண்ணீரின்மேல் நிலைநிறுத்தினார்.
3யெகோவாவினுடைய மலையில் ஏறத்தகுந்தவன் யார்?
அவருடைய பரிசுத்த இடத்தில் நிற்கத் தகுந்தவன் யார்?
4சுத்தமான கைகளுடையவனும் தூய்மையான இருதயமுடையவனும்
தன் ஆத்துமாவை பொய்யானவைகளுக்கு ஒப்புக்கொடாதவனும்
பொய் சத்தியம் செய்யாதவனுமே.
5அவர்கள் யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவார்கள்,
தங்கள் இரட்சகரான இறைவனால் நியாயத்தைப் பெறுவார்கள்.
6அவரைத் தேடுகிறவர்களின் சந்ததி இப்படிப்பட்டதே,
யாக்கோபின் இறைவனே, உமது முகத்தைத் தேடுகிறவர்கள் இவர்களே.
7வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்;
பூர்வீகக் கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்;
மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள்.
8இந்த மகிமையின் அரசன் யார்?
அவர் பலமும் வலிமையும் உள்ள யெகோவா,
அவர் போரில் வல்லமையுள்ள யெகோவா.
9வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்;
பூர்வீக கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்;
மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள்.
10மகிமையின் அரசனான இவர் யார்?
அவர் சேனைகளின் யெகோவா;
அவரே மகிமையின் அரசன்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy