YouVersion Logo
Search Icon

சங்கீதம் 149

149
சங்கீதம் 149
1யெகோவாவைத் துதியுங்கள்#149:1 துதியுங்கள் என்பது எபிரெயத்தில் அல்லேலூயா; வசனம் 9 லும் உள்ளது..
யெகோவாவுக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுங்கள்,
பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதியைப் பாடுங்கள்.
2இஸ்ரயேலர் தங்களைப் படைத்தவரில் மகிழட்டும்;
சீயோனின் மக்கள் தங்கள் அரசரில் களிகூரட்டும்.
3அவர்கள் யெகோவாவினுடைய பெயரை நடனத்தோடு துதிக்கட்டும்,
தம்புராவினாலும் யாழினாலும் அவருக்கு இசை மீட்டட்டும்.
4ஏனெனில் யெகோவா தம்முடைய மக்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார்;
தாழ்மையுள்ளவர்களை அவர் இரட்சிப்பினால் முடிசூட்டுகிறார்.
5பரிசுத்தவான்கள் இந்த மகிமையில் களிகூர்ந்து
தங்கள் படுக்கைகளில் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள்.
6அவர்களுடைய வாய்களில் இறைவனின் துதியும்,
கைகளில் இருபக்கமும் கூர்மையுள்ள வாளும் இருப்பதாக.
7அவைகளினால் நாடுகளைப் பழிவாங்கவும்,
மக்கள் கூட்டத்தைத் தண்டிக்கவும்,
8அவர்களுடைய அரசர்களைச் சங்கலிகளாலும்,
அவர்களுடைய அதிகாரிகளை இரும்பு விலங்குகளினாலும் கட்டவும்,
9அவர்களுக்கு விரோதமாக எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை
நடைமுறைப்படுத்தவும் அவை இருப்பதாக.
இதுவே அவருடைய எல்லா பரிசுத்தவான்களுக்கும் உரிய மகிமை.
யெகோவாவைத் துதியுங்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in