YouVersion Logo
Search Icon

சங்கீதம் 135

135
சங்கீதம் 135
1யெகோவாவைத் துதியுங்கள்.#135:1 எபிரெயத்தில் அல்லேலூயா வச 3 மற்றும் 21
யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள்;
யெகோவாவின் பணியாட்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்,
2நமது இறைவனுடைய ஆலய முற்றங்களிலும்,
யெகோவாவினுடைய ஆலயத்திலும் ஊழியம் செய்கிறவர்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்.
3யெகோவாவைத் துதியுங்கள், யெகோவா நல்லவர்;
அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள், அது இனிமையானது.
4ஏனெனில் யெகோவா யாக்கோபைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்;
இஸ்ரயேலரைத் தமது அருமைச் சொத்தாய் இருக்கும்படி தெரிந்துகொண்டார்.
5யெகோவா பெரியவர் என்றும்,
நமது யெகோவா எல்லாத் தெய்வங்களைப் பார்க்கிலும்,
மேலானவர் என்பதையும் நான் அறிவேன்.
6வானத்திலும் பூமியிலும்,
கடல்களிலும், அவைகளின் எல்லா ஆழங்களிலும்
யெகோவா தமக்கு விருப்பமான எதையும் செய்கிறார்.
7அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச் செய்கிறார்;
மழையுடன் மின்னலையும் அவர் அனுப்புகிறார்,
காற்றை தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து வெளியே புறப்படச்செய்கிறார்.
8அவர் எகிப்தின் முதற்பேறுகளை அழித்தார்,
மனிதரின் முதற்பேறுகளையும் மிருகங்களின் தலையீற்றுகளையும் அழித்தார்.
9எகிப்தே, பார்வோனுக்கும் அவனுடைய எல்லா பணியாட்களுக்கும் விரோதமாக
அவர் தம்முடைய அடையாளங்களையும் அதிசயங்களையும் உன் மத்தியில் அனுப்பினாரே.
10அவர் அநேக நாடுகளைத் தாக்கினார்,
வலிமைமிக்க அரசர்களைக் கொன்றார்;
11எமோரியரின் அரசன் சீகோனையும்,
பாசானின் அரசன் ஓகையும்,
கானானின் அரசர்கள் எல்லோரையும் அழித்தார்,
12அவர் அவர்களுடைய நாட்டை உரிமைச்சொத்தாக,
தமது மக்களாகிய இஸ்ரயேலருக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்.
13யெகோவாவே, உமது பெயர் என்றென்றைக்கும் நிலைக்கிறது;
யெகோவாவே, உமது புகழ் தலைமுறை தலைமுறையாக நிலைக்கும்.
14யெகோவா தம் மக்களின் நியாயத்தை விசாரித்து,
தம் அடியார்கள்மேல் இரக்கங்காட்டுவார்.
15பிறநாடுகளின் விக்கிரகங்கள் வெள்ளியும் தங்கமும்,
மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டதுமாய் இருக்கிறது.
16அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது;
அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
17அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது,
அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.
18அவைகளைச் செய்கிறவர்களும்,
அவைகளை நம்புகிற எல்லோரும் அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
19இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்;
ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்;
20லேவி குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்;
அவருக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவைத் துதியுங்கள்.
21எருசலேமில் குடிகொண்டிருக்கும் யெகோவாவுக்கு,
சீயோனிலிருந்து துதி உண்டாகட்டும்.
யெகோவாவைத் துதியுங்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in